........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 373

நான் நானாகவா...?

.

பெண்ணே!
சத்தியமாய் சொல்கிறேன்
நான்
நானாய் வாழ்கிறேன்.
என்பதை விட
உன்னோடும் உன்
நினைவுகளோடும் தான்
வாழ்கிறேன்
உறங்கும்போது மட்டுமே!
உன்னை மறக்க
நினைக்கிறேன்.
அதுவும் முடியவில்லை.
கனவிலும் உன்
நினைவுகள் மட்டுமே!
வந்து போகின்றன...!
கல்லாய் என்
மனதை வைத்துக் கொண்டாலும்
அந்த கல்லிலும்
உன் உருவம்
மட்டுமே தெரிகின்றது...
என் உதடுகள் மட்டுமே
உன்னை
"மறந்து விட்டேன்"
என்று சொல்கின்றது
இதயம் இன்றும்
உன் நினைவுகளை
சுமந்து கொண்டுதான்
துடிக்கின்றது...
பதில் இல்லாத
இந்த கேள்விக்கு
நீயே பதில்
சொல்வாய் பெண்ணே!

-த.சத்யா, இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.