........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 374

அன்பு என்பது...

.

செடிகள் துளிர்க்குமென்று
மழை பொழிவதில்லை
துளிர்க்க ஏதுமில்லா
பாறையையும் மழை
நனைக்காமல் விடுவதில்லை
மேகங்கள் ஒன்று
திரண்டால்...!

கடல் அலை
கால் நனைக்குமென்று
காற்று வீசுவதில்லை
கலைக்க காலடித்தடம்
இல்லாவிடினும் அலைகள்
மோதாமல் விடுவதில்லை
காற்று வீசினால்...!

பலன் கிடைக்குமென்று
அன்பு செலுத்தப்படுவதில்லை...
அதுபோல்,
அன்பென்பது எதிர்பார்ப்புகளேதும்
இல்லாவிடினும்
மழையாய்
பொழியாமல் இருப்பதில்லை
மனதில் உண்மை அன்பிருந்தால்...!

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.