........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 440

பொருள்? தாரம்?

சீர்திருத்தம் செய்வோம்
சிங்கார இளைஞனே
புதுப் புரட்சி செய்வோம்
புரட்சி மணம் புரிவோம்
வரும் தட்சணை பாராமல்
வாழ்க்கை துவக்குவோம்!

அடிமை மாடுபோல்
மாட்டுப் பெண் வியாபாரம்
மாங்கல்ய விலங்கிட்டு
மனம் பொருந்தாத வாழ்க்கை
மங்கை நிலவு மாமியார்
வீட்டில் மெழுகானாள்
மருமகள் பெயரில்
வேலைக்காரியானாள்!

கனியவள் கருகினாலும்
கண்ணான கணவனை
கருத்துடன் கவனித்தாள்
தாய்மையின் பொறுமை காத்தாள்!
கல் நெஞ்சக்காரர்கள்..
சீர் கொண்டு வந்த
சீர்குலப் பெண்ணை
சித்திரவதை செய்தனர்!

கற்பு அணிபூண்டு
பொறுமையுடன் உன்
பெருமையை காக்க வந்தவளை
வறுமையில் வாடவிடாதே...!

இளைஞர்களே...
சிந்தியுங்கள்
பொருளாதாரம்
பொருளா? தாரமா?

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.