........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 439

பெருமை கொள்வோம்...!

கற்சிதரலுக்குப்
பெருமை
சிலையொன்றைக்
கொடுத்ததில்...

மேகக் கூட்டத்துக்குப்
பெருமை
மழைநீரைப் பூமிக்கு
பொழிந்ததில்...

மலர்களுக்குப்
பெருமை
வஞ்சமில்லாது
வாசனை
வழங்குவதில்...

தூரிகைக்குப்
பெருமை
அழகோவியமொன்று
தீட்டியதில்...

சிப்பிக்குப்
பெருமை
விரையம் செய்யாது
முத்தைக்
கொடுத்ததில்...

மண்ணுக்குப்
பெருமை
விதையை
முளைக்க வைத்து
விளைச்சல்
குவித்ததில்...

உழைப்புக்குப்
பெருமை
வறுமையற்ற
வளமை எங்கும்
செழிப்பதில்...

மனிதனுக்குப்
பெருமை
இந்தப் பூமியை
அடுத்த தலைமுறைக்கும்
நேசத்தோடு
விட்டு வைப்பதில்..!

-பாரதியான்.

 

 

 

 

 

m

 

பாரதியான் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.