........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 475

நாடென்று இருந்தால்...!

நாடென்று இருந்தால்
அங்கு
நற்றொழில் பெருக வேண்டும்!

நாடென்று இருந்தால்
அங்கு
நன்மழை பெய்தல் வேண்டும்!

நாடென்று இருந்தால்
அங்கு
நலம் மிக்கார் வாழ்தல் வேண்டும்!

நாடென்று இருந்தால்
அங்கு
சுத்தம் நகரிடை எங்கும் வேண்டும்!

நாடென்று இருந்தால்
அங்கு
நற்பொருள் கிடைத்தல் வேண்டும்!

நாடென்று இருந்தால்
அங்கு
நல்வணிகம் நடத்தல் வேண்டும்!

நாடென்று இருந்தால்
அங்கு
நடுநிலை அரசு வேண்டும்!

நாடென்று இருந்தால்
அங்கு
நிலையான அரசு வெண்டும்!

இவை யாவுமே உண்டு
ஆதலால்
சிங்கை நகரியர்
உயர்ந்தார் மண்ணில்!

ஆதலால்
உலக மாந்தர் யாவரும்
வாரீர்! வாரீர்! வாரீர்!

- முனைவர் தியாகராஜன்.

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.