........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:51

ஜன்னலோரம்...?

இன்று
வெய்யில் அதிகம் தான்
அதன் பலனோ என்னவோ
மழை

மழையின் சுவடுகளை
தாங்கியிருந்த செடியின் இலைகள்
எங்கும் ஈரப்பதம்

இருப்பினும்
இரவு வந்துவிட்டது

நிலவும் தான்
கசியும் நிலவொளியில்
எல்லாம் அழகு தான்
சிறு சிறு நீர்த் தேக்கங்களில்
சிதறிக்கிடக்கிறது நிலவு

நிசப்தங்களில்
முன்னுரிமைபெற்ற
இரவுபூச்சிகள்
ஏதோ பேசிக்கொள்கிறது

இந்த மௌனத்தைக்
கலைக்கிறது
இலைகள் தாங்கிவிட்ட
மழையின் சடலங்கள்

மழை கலந்த காற்று
என்னுள் சில்லிப்பூட்ட
கவிதை ஏக்கமாய்
புன்னகைக்கிறேன்.

-அறிவுநிதி.

 

 

 

 

m
 

அறிவுநிதி அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.