........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:52

எப்போது சந்திப்பு...?

பேருந்தில் செல்லும் போதும்
இரவுநேரத் தனிமையிலும்
நிமிடத்திற்கு ஒருமுறை
தலையைக் காண்பித்து
இம்சிப்பது நின்று போனது

காலையில் ஒருமுறை
மாலையில் ஒருமுறை என
பள்ளியின் வருகைப் பதிவேடாய்
அழைப்பு மணியை அலறவிட்டு
அம்மு நான்தான் என்று சொல்லவும்
நானாக இல்லாமல்
மாறிய உலகிலிருந்து விடுபட்டேன்

இப்பொழுது
அதிகம் சந்திப்பதில்லை
கனவிலும் கூடத்தான்
ஆபூர்வமாகச் சந்தித்தால்
தொலைந்துவிட்ட வார்த்தைகளைத்
தேட வேண்டியிருக்கும்

இடைப்பட்ட நேரத்தில்
கனத்த மௌனம்
பிரிந்து செல்கிறோம்...
இனி எப்போதும் சந்திக்கக் கூடாது...
அவளும் நினைத்திருக்க கூடும்...

-பாண்டித்துரை, சிங்கப்பூர்.

 

 

 

 

m
 

பாண்டித்துரை அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.