........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 530

மீண்டும் வருமா வசந்தம்?

முடிந்த அத்தியாயத்திற்கு
முகவுரை தேடுகிறேன்...

விடிந்த இரவுக்கு
விளக்கேற்ற விழைகிறேன்..!

பட்டமரத்தில்
பசுந்தளிர் தேடுகிறேன்..!

அணைந்த நெருப்பில்
குளிர்காய முயல்கிறேன்..!

விரிசல் கண்ணாடியில்
ஒற்றை உருவம் தேடுகிறேன்..!

ஓட்டைப் பானையில்
நீர் நிரப்ப முயல்கிறேன்..!

வாடிய மலரில்
வர்ணம் தேடுகிறேன்..!

சிந்திய கண்ணீரை
சேகரிக்க நினைக்கிறேன்..!

தோல்விதான்
வெற்றிக்குப் படியாம்
மீண்டும் வருமா வசந்தம்..?

-பாளை.சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.