........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 531

வெற்றிக்குப் பாதை...?

உருக்கப்படும் தங்கம் தான்
உரு மாறி நகையாகிறது...

அறுக்கப்படும் மரம் தான்
அழகான ஜன்னலாகிறது...

இடிக்கப்படும் நெல் தான்
உமி நீங்கி அரிசியாகிறது...

துவைக்கப்படும் துணி தான்
தூய்மை பெற்று வெண்மையாகிறது...

ஏற்றப்படும் விளக்கு தான்
இருள் நீக்கி ஒளி தருகிறது...

தட்டப்படும் தந்தி தான்
தம்புராவில் இசை தருகிறது...

செதுக்கப்படும் பளிங்கு தான்
செம்மை பெற்றுச் சிலையாகிறது...

பதப்படுத்தப்படும் தோல் தான்
பயனுள்ள காலணியாகிறது...

மிதிக்கப்படும் மண் தான்
மிருதுவான பானையாகிறது...

புதைக்கப்படும் விதை தான்
மண்ணை விட்டு எழுகிறது..

தோற்றுப் போகும் கோழை தான்
துணிவு பெற்று வீரனாகிறான்..

காயம் படும் மனிதன் தான்
காலத்தை வென்று வாழ்கிறான்..!

-பாளை.சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.