........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 535

இன்று தீபாவளி!

தீமைகள் ஒழிய
தீப ஒளி எழுந்தது...
நன்மை துலங்க
நல்லொளி பிறந்தது...
சிங்கை நகரம்
தீபங்களால் மின்னியது
இன்று...

கிழிந்த உடைகளுக்கு
விடுதலை அளித்து
புதிய உடைகளுக்குப்
புத்துயிர் கொடுக்கும் நாள்...
தீப ஒளித்திருநாள்...

ஏழைகளின்
உள்ளக் குமுறல்கள்
இன்று வெடிகளாகி
வெடிக்கின்றன...

நாட்டைப் பீடித்த
நரகாசுரர்கள் யார்?
அபின் கஞ்சா மது
இவர்களே...

அடியோடு அழித்துவிட்டு
ஏற்றுங்கள் தீபங்களை
வளம்பெற நாடு...
நலம் பெற வீடு...
ஏற்றுங்கள் தீபங்களை...
போற்றுங்கள் வழிபட்டு...

இப்புனித நாளில்
நம்மைப் பீடித்த
இப்பிசாசுகள்
ஒழியட்டும்...
அழியட்டும்...

உண்மை உயரட்டும்...
நேர்மை நிமிரட்டும்...
சத்தியமே வெற்றியாகட்டும்...

-முனைவர் மா. தியாகராஜன்.

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.