........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 554

பிரபாகரன் வாழ்க..!

எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை
விடுதலையை -
எம் உணர்வை -
மீண்டும் மீண்டுமாய் உயிர்ப்பித்துத் தந்தவரே;

வாழ்வின் வெற்றிதனை -
விடுதலை வேட்கையாகக் கொண்டு -
மொழி உணர்வைத் தமிழ் உணர்வென - என்
கடைசித் தமிழனுக்கும் ஈந்தவரே;

வீழும் ஒரு தோல்வியில் கூட -
பாடம் உண்டென மீண்டு -
எமை மெல்ல மெல்ல ஒருங்கிணைத்து
ஒரு தேசமாய் வளர்த்தவரே;

அடங்கிப் போனவள் கையில் ஆயுதம் பிடிக்கவும்
அடிமை என்றெண்ணியவனுக்குத் திருப்பியடிக்கவும்
உயிர் பறித்துப் போனவனிடம் இருந்து - எம்
விடுதலையை மீட்கவும் பாடம் புகட்டியவரே;

ஒழுக்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் போதித்து
வீரத்தை எம் குழந்தைகளுக்கும் ஊட்டி -
தேசம் என்றால் எது என்றும், அதைத் தமிழன் ஆண்டால்
எப்படி இருக்குமென்றும் உலகிற்குக் காட்ட உழைத்தவரே;

என் தாய் வயிற்றில் பிறக்காமல் உற்ற
என்னன்பு அண்ணனே,
என்றேனும் ஓர் தினம் எம் தேசம் ஆளப் போகும்
எம் புகழ்மிகு மன்னனே,

உனக்கு செல்வங்கள் பதினாறென்ன -
இருக்கும் எல்லாம் வளமும் நலமும் கிடைத்து
சுதந்திரம் வீசும் மண்ணின் - ஒற்றைத் தலைவனாய்
எமைக் காக்கும் உண்மைத் தலைவனாய்

வாழ்வாங்கு வாழ -
எம் இனத்தின் மொழியின் வழிநின்று
இறையின் அருளுக்கு இறைஞ்சி
மனதார வாழ்த்துகிறோம்!!!

-வித்யாசாகர்.

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.