........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:56

இவர்கள் தவழும் குழந்தைகள்!

பறந்து செல்லும்
பறவைக் கூட்டங்களோடு
தவழ்ந்து செல்லும்
மேக கூட்டங்கள்!

காம்பில்லாத ரோஜாக்கள் -இந்த
காலில்லாத ரோஜாக்கள்!

வலிகளை சுமக்கமுடியுமென
இறைவன் தேர்ந்தெடுத்த
வான் குழந்தைகள்!

காலணிகளை வைக்கவும்
தயங்கும் இடங்களில்,
கரங்களை வைத்தபடி
இயங்கும் இதயங்கள்!

சமூகத்தின்
அவநம்பிக்கைகளை
களைய வைத்து,
தன்னம்பிக்கைகளை
விளைய வைத்தவர்கள்!

இழந்திட்ட அங்கங்களின்
உடல் வலிமையை
இருமடங்காய்
இதயத்தில் ஏற்றியவர்கள்!

இவர்களுக்கு தேவை....
வாய்ப்புகள் என்னும்
வழிகள் தான்!
அனுதாபம் என்னும்
வலிகளல்ல....

-ஷீ-நிசி.

 

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.