........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:57

முகம்

பிரம்மனின்
தனிச்சூத்திரத்தில்
விளைந்த ஆக்கம்,

அகத்தினை
புறத்தே நீட்டும்
அற்புதத்தீவு,

பதைபதைக்கும்
இதயம் கண்டால்
பரிதவிக்கும் படிமம்,

நகைப்பின்
உருவம் காட்டும்
நங்கூரக் கயிறு,

சில ஒத்திருந்தும்
நூலிழை பிசகி
உலகினை வியக்க வைக்கும்,

மரணித்த,
அக்கணம் முதல்
பிறர் நினைவில்
உலா வரும்
ஒரே ஓவியம்
முகம்!!!. 

-கோட்டை பிரபு.   

 

 

m
 

கோட்டை பிரபு அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.