........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 574

புயலாடும் பெண்மை!

பெண்ணே!
நீ பாவலர் போற்றும்
மென்மையானவள் தான்!
ஆனால்
அடக்கியொடுக்கி
வாழ நினைக்கும்
ஆடவர் மத்தியில்
அடல் சான்ற
வன்மையானவள்!

பணிவும் பரிவும்
பாவையர்க்கு
அழகானவை தாம்!
ஆனால்
அரிவையர்க்கெதிராக
அநீதி தலையெடுக்கும் போது
பணிந்து போகாமல்
துணிந்து நில்!
திண்மை நெஞ்சோடு
தொடர்நது செல்!

பூங்கொடியே!
நீ மலருக்கு உவமிக்கப்பட்ட
மங்கை தான்!
ஆனால் தீங்கினைக் கண்டால்
முள்ளாகத் தீண்டவும்
தயங்காதே!

மாதரசே!
நீ மந்தமாருதம் தான்!
பெண்மைக்கு ஊறு வந்தால்
புயலாக மாறி விடு!!

- வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை.

 

 

 

 

 

m

 

வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு