........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 575

வீரத் தமிழச்சி!

மண்ணின்
விடுதலைக்குப் போராடிய
தமிழச்சியின் நிர்வாணம்
இணையமெங்கும் ஒளிபரப்பு;
உயிரிருந்தும் உலவும் நாம் -
அதை கண்டும் -
சாகாத இழி பிறப்பு!!
------------------

மானத்தில் -
தொட்டால் சுடும் நெருப்பு,
இழிவாய் -
பார்த்தாலே பாயும் மின்சாரம்,
அவள் -
தாயிற்கும் ஒரு படி மேல் என்று
இனி புரியும் - சிங்களனுக்கு!!
------------------

அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால்
ஒன்று பார்த்தவரையெல்லாம்
எரித்திருப்பாள்,
அல்லது - தன்னையாவது
எரித்துக் கொண்டிருப்பாள்!!
------------------

தப்பித் தவறி
அவள் பிள்ளை இதை
பார்த்திருந்தால்-
எத்தனை ராஜபக்ஷேவை அவன்
கொன்றிருப்பானோ?
------------------

எம் மண்ணின் வீரமென்
தமிழச்சிகள்,
நாய்கள் கொன்றுவிட்டு தான்
கொந்தியிருக்கின்றன!!
------------------

ஜென்மம்
எத்தனை எடுத்தாலும் இனி
ரத்தத்தின் ஒரு துளியிலாவது
இருக்கும் -
அவன் மீதான; அவளின் கோபம்!
------------------

யாரும் சாட்சிக்கு வேண்டாம்
காற்றும்.. வெளிச்சமும்..
மண்ணும்.. வானும்..
மரமும் செடிகளும் -
பார்த்துக் கொண்டு தானிருந்தன
அந்தக் கயவர்களை!!
------------------

கடல் தகதகவெனக்
கொதித்து -
உலகத்தை சூழ்ந்து அழித்திருக்கும்;
அந்த கொடுமைக்கு உடனே
தண்டனை கொடுப்பதெனில்!!
------------------

யாரோ ஒருவனுக்கு
துணிவிருந்தால்
அவள் கையில் ஒரு அரிவாளை
கொடுத்துவிட்டு சொல் -
உன்னை இப்படிச் செய்வேனென்று;
அந்த அரிவாளில் -
உன்னைப் போல் - அவள்
நூறு பேரை அறுத்திருப்பாள்!!
------------------

எனக்கு
மரணத்தை இப்பொழுதேக் கொடு;
அதற்கு ஈடாக -
இணையத்தில் தெரிந்த
என் தமிழச்சியின் வெற்றுடம்பை
ஈழ விடுதலையால் போற்று,
இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்!!

-வித்யாசாகர்.

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு