........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 605

எழுது! எட்டும் வரை எழுது!!

உயிரெழுத்து உயிருள்
பயிராகும் முதலெழுத்து.
உயிர், மெய்ப் பயிரெழுந்து
உணரவைக்கும் அகிலத்தை.
மொழிகள் அழகுடை மலர்கள்.
மொழிகள் உருசியுடை கனிகள்.
விழி நிறைந்த இன்பத் துளி.
அழிவற்ற பாதைக்கு ஒளி.
எடுத்தாள ஆள இன்பம்.
எனக்கும் உனக்கும் எழிலானது.
எழுது! எட்டும் வரை எழுது!
எல்லையில்லா இன்பத்தின் கொல்லை.

- வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.     

 

 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு