........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 609

வியர்வைதான் மிச்சம்!

விலைவாசி விஷம்போல் ஏறிப்போச்சு
விவசாயிக்கு வியர்வைதான் மிச்சமாச்சு

ஏழைகளை மனதில் வைத்து
எவன் சட்டம் தீட்டுறான்!

ஏமாற்றிப் பிழைக்கவே தினம்
திட்டம் தீட்டுறான்!

தாருலையில் தார்போல ஏழை
உடம்பு கருகுது!

உழைச்ச கூலி கவராம
உள்ளம் குமுறுது!

மிதிபட்டு மிதிபட்டு
மெலிந்து போயிட்டான்!

மிரட்டலுக்குப் பயந்து நடுங்கி
நலிந்து போயிட்டான்!

ஏழை வாழ்வைப் பார்க்கும் போது
கண்கள் செந்நீர் கோர்க்குது!

இவர் வாழ்வை உயர்த்திடவே
எழுதத் தோணுது!

பதவிமேடை ஏறத் துடிக்கும்
பணம் படைத்தவரே!

ஏழை வாழ்க்கைக்கு
காப்பீடு தந்து பின்
ஓட்டு கேளுங்கள்!

- விஷ்ணுதாசன்.    

 

 

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு