........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 675

அந்த நாள்! இனிய நாள்!!

மூச்சுக்காற்று உறுதிப்படுத்தும்
உடன்படிக்கைக் கதை.
பிரச்சனைகளின் முற்றுப்புள்ளி.
தூக்க முடியாத
சுமைகளுக்கு
இறைவன் கொடுக்கும்
நிரந்தர விடுப்பு.

அறுசுவை உண்டு,
வாசனையூட்டிப்
போற்றிப் பாதுகாத்த
உடம்பு
தீக்கிறையாகும்
அற்புத நிகழ்வு.

பிறக்கும் போதே நிச்சயிக்கப்பட்ட
தீர்மானத்தை
இயற்கை அரங்கேற்றும்
இனிய நாள்.

-முனைவர் வி. தேன்மொழி, சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு