........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 680

பாக்கியவதிகள்!

ஒட்டிக் கிடக்கும் வர்ணப் பூச்சுக்கள் விட்டும்
ஒதுங்கிப் போவெனத்தான் சொல்லுது
ஓயாது உள்ளொலிக்குமோர் அசரீரி.
பலவேளைகளில்
பாதப் பெருவிரல் சுரண்டுகிற
செல்லப் பூனைக் குட்டியின் குழைவொலியாகவும்
மிகச்சில பொழுதுகளில்
அதுவோர் அடிமைக்கான அதிகாரக் குரலாயுங் கூட.
திரிக்கவும் உரிக்கவும் மட்டுமே விழைகிற
கூர்நகங்களிடையேயான தொடர் பயணங்களுக்குள்
எப்படித் திறப்பேன் முகத்திரை.
அரங்கும் தளமும் அவளுக்குமென்றான பெருமித முகங்களின்
மறுபுறத்திலே பதிந்து கிடக்கிற ஆழமான கீறல்களூடே
மெல்லமாய் உணர்கிறேன் ....
வீடும் அது சார்ந்ததும் மட்டுமேயான
ஒற்றைச் சிந்தனைக்குள் நிறைவு கண்ட
உம்மம்மாக்கள்தான் பாக்கியவதிகள்.

-எஸ். பாயிஸா அலி.

 

 

 

 

 

 

 

m

 

எஸ். பாயிஸா அலி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு