........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 698

உறுதி கொண்டேன்!

சிந்தனை எனும் தேரேறி
எந்தனில் கொஞ்சம் பயணித்தேன்
முந்தனை யான் வாழ்ந்த முறை
நிந்தனை என்பதை நானறிந்தேன்

அப்பனும், அம்மையும்
அவனியில் என்னை விழுத்தினர்
எப்பயன் எவ்வழி செல்வது
அப்பயன் அறியாமல் வாழ்ந்தேன்

மெய்ப்பொருள் வாழ்வில் புரியாமல்
பொய்ப்பொருள் தேடி வாழ்ந்த காலம்
சித்தருள் உறைந்த உண்மைகள் காண‌
பித்தருள் ஒருவனாய் இருந்தது புரிந்தது

முப்பொருள் தேடி ஓடி நானும்
முத்தமிழ்ச் சுவையுள் அமிழ்ந்திட்டேன்
எப்பொருள் யார்வாய் கேட்பினும்
மெய்பொருள் காண்பது அறிவென்றுணர்ந்தேன்

என்னுள் ஒளிர்ந்த “நான்” என்னும் விளக்கு
எண்ணெய் இன்றி எரிவது கண்டேன்
எப்படி அதனை அணைப்பது என்று
என்னுள் இன்னும் கேள்விகள் மூளும்

உள்ளத்தில் இருக்கும் உண்மைகள் தன்னை
உருக்கிக் கவிதையாய் வார்த்திடத் துடிக்கும்
உணர்வுகள் என்னை மனிதானய் மாற்றும்
உறுதி கொண்டேன் மன‌தில் இன்றே. 

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு