........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 697

விட்டுப்போன சொந்தம்

அழகான சொற்கள்
வருணனை எச்சங்கள்
எல்லாமே
என் பாத்திரத்தின்
உள்ளிருந்து தீர்ந்துபோயிற்று.
சிறுவயது நினைவலைகள்
உன் மீதுதான்
கால்கடுக்க நிற்கிறது.
விளையாடி முடித்த
வேகத்தை
நுரையீரலுக்கும் மூக்கிற்கும்
இடையே
வேகமாய் பயணிக்கும்
மூச்சுக்காற்று
தந்தியடிக்க
ஓடி வந்து
உன் முதுகில்
வியர்வையோடு ஒட்டிய
அழகான பொழுது.
அழுக்கு
உன் மீது படுமென்று
நீ விரட்டியடித்த
பக்கங்களைப்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்.
அழிக்கவும் முடியவில்லை.
கிழிக்கவும் மனமில்லை.
வியர்வை படாத
பவுடர் முகத்தோடு நான்.
அழைக்க நீ.
வரத்தான் மனமில்லை.
நீ பார்த்திராத
குழந்தைக்கு அம்மாவாய்
உன் முறைப்பெண். 

-முனைவர். வி.  தேன்மொழி, சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு