........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:70

எல்லாப் பிறவியிலும்...?

மலராய் அவள் வயிற்றில் நான் மலர
என்ன தவம் செய்தேனோ இப்பிறவியில்
வர்ணிக்க வார்த்தைகள் எழவில்லை நாவினில்
வார்த்தைகளும் இல்லை உலகினில்...

மடியினில் மார்போடு எனை அணைத்த
அணைப்பைச் சொல்லுவா - இல்லை
உயிராய் உடலாய் உனை வருத்தி
எனை வளர்த்த வளர்ப்பைச் சொல்லவா?

வெற்றிகோப்பைகளை நான் ஏந்த
விழியெல்லம் நீரோடு எனை அணைத்த
அணைப்பைச் சொல்லவா – கருவினில்
நான் வளர கண்மணியாய்... நீ
காத்த காப்பைச் சொல்லவா?

உன்னால் என்னை மறக்க இயலாதபோது
என்னால் மட்டும் உன்னை மறக்க இயலுமோ
என்னை நீ தாங்குவது உயர்வல்ல
உன்னை நான் தாங்குவதே உயர்ந்தது

என் உடலில் உயிர் இருக்கும் வரை
விரல்நுனி வலிக்கும் வரை – உன்னை
பூவாய் என் உள்ளங்கையில் தாங்குவேன் இறுதிமூச்சு இருக்கும் வரை...

எல்லாப் பிறவியிலும் உனது மடிதனில்
நான் மலர வேண்டுகிறேன்...

-த.சத்யா, இராஜபாளையம்.          

 

m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.