........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:71

ஓய்வு கேட்கும் காலங்கள்.

ஒரு ஆறுமாத காலத்திற்காவது
என்னைத்
தனிமைச் சிறையில் அடையுங்கள்

செய்யச் செய்யத் தொடரும்
மதிப்பற்ற வேலைகளால்
அலுத்துச் சலித்த என்
ஆயிரங் காலங்கள்
ஓய்வு கேட்கின்றன...

யாரையேனும் சுட்டதாகவோ
விஷம் வைத்ததாகவோ
இல்லை... தாக்கியதாகவோ
என்னைச் சிறைப்படுத்த
முடியாது.

தவறான நடத்தையென்றோ
தவறான வழக்கமென்றோ
உங்களை எதிர்த்ததாகவோ
இல்லை... ஏசியதாகவோ
உங்களால் சொல்ல முடியாத
அடக்கத்தோடு நானிருக்கிறேன்.

வீறுகொண்டு நான் எழவும் இல்லை
என் தலைபின்னே ஒளி தோன்றவில்லை
தெருமூலையில் தெய்வமாகவும் இல்லை

என்னைச் சிறை வைக்க
காரணம் வேறென்ன வேண்டும்?

சமையலில் ருசியில்லை
ஆம்பளையை மதிப்பதில்லை
சம்பாத்தியத்தின் கடினம் புரியாமல்
கறிவேப்பிலையைக் காயப் போட்டுட்டா...

-கலை இலக்கியா.            

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.