........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:74

தமிழினமும் ஒரு நாள்...

தமிழே தமிழ்ச் செல்வமே
உன்னை இழந்த தமிழுலகம்
உன்வீர வரலாற்றிற்கு தலைவணங்குகிறது

நீ அழியவில்லை அடமானம் போகவில்லை
நீதிக்கும் நேர்மைக்கும் கொடிஏந்தினாய்
எட்டுமுலக தமிழர் உள்ளங்கள்
தோறும் வாழ்கிறாய் வளர்கிறாய்

உன்நாடு உனதுஇனம் உன்தாயின் மொழி
வாழ்விற்கும் வளத்திற்கும் உந்துஉணர்வாய்
கயல்வழியாய் நிழல் தந்து நிற்கிறாய்

எம் தமிழினமும் ஒரு நாள் பேரினமாகும்
உனக்கும் கோயில் கட்டி கும்பிடும்
உன்னைக் கொன்ற வானரக்கூட்டம்
அன்று! உன்முன் தலைதாழ்ந்து நிற்கும்!.

-வை.சுதர்மன், சிங்கப்பூர்.             

 

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.