-
மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்
-
கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.
-
தீக்கோழிகள் சுமார் 70 வருடம் வரை
உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.
-
பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.
-
Grizzly Bear, என்கிற கரடியினம்
குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.
-
ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500
கிராம் அள்வுள்ள தேனைச் சேகரிக்கிறது.
-
அன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் வரை இருக்கும்.
-
தெள்ளுப் பூச்சி (Flea) அதன் உடலின்
நீளத்தைப் போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும்.
அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.
-
நிலத்தில் பறக்காத பென்குயின் பறவைக்கு நீருக்குள் பறக்கும்
சக்தி உண்டு.
-
தேனீக்கள் இனம் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில்
தோன்றி
விட்டன.
-
Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்து
விட்டு அதன் எடையைக் கணக்கிட்டால் அதன்
இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும்.
-
விலங்கினகளில் Cat Fish க்குதான் அதிக
சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.
-
அறிவற்ற பறவை என்று எல்லோரும் நினைக்கும் வாத்துக்கள் .
உலகத்தில் உள்ள பறவை இனங்களின் அறிவு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது முதல்
நூறு இடங்களிற்குள் இருக்கிறது
-
வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடும்.
-
உலகத்தில் வாழும் பூச்சி இனங்களில் மிகவும் வினோதமான பூச்சி
கரப்பான் பூச்சிதான். தலையே இல்லாமல் 9 நாட்கள் உயிரோடு
வாழும் சக்தி கொண்டவை கரப்பான் பூச்சிகள். அதற்கு மேலும் அதனால் வாழமுடியும்.
ஆனால் எதுவுமே சாப்பிட முடியாததால் பசியால் வாடியே உயிர்த் துறக்கிறதாம்!
-
உலகத்தில் உள்ள விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம்
யானைதான்.
-
புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன்
படைத்தது.