-
அமெரிக்க ஜனாதிபதிகளில் புலிட்சர்
விருதினை பெற்ற ஒரே
ஒருவர் ஜான் எப்.கென்னடிதான்.
-
லினஸ் பாலிங் வேதியியலுக்கான நோபல் பரிசை 1954
ஆம் ஆண்டிலும், சமாதானத்திற்கான நோபல் பரிசை 1962 ஆம் ஆண்டிலும் பெற்றார்.
இரண்டு வெவ்வேறான பிரிவுகளில் நோபல் பரிசினை பெற்ற
ஒருவர் இவர்தான்.
-
உலகில் மிக நீளமான பாலம் சைனாவில் உள்ளது. இது 43.4 கி.மீ
நீளம் கொண்டது.
-
நைல் நதி 7088 கி.மீ தொலைவு
கொண்ட மிக நீளமான நதி என்பதுடன் உலகிலேயே மிக நீளமான நதி என்கிற
பெருமைக்குரியதாகும்.
-
சந்திரனில் இதுவரை 12 நபர்கள் கால்
பதித்துள்ளனர்.
-
அமெரிக்க ஜனாதிபதிகளில் 15 வது ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் பக்னான் திருமணம்
செய்து கொள்ளாமல் இருந்தவர்.
-
அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச்
சேர்ந்த
கோவாலாக் கரடி தண்ணீர் குடிப்பதில்லை. தமக்குத் தேவையான நீரை
தாம் வசிக்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் இலைகளிலிருந்தே
பெறுகின்றன.
-
“காட்விட்’ என்ற பறவை, உண்ணாமல், உறங்காமல், ஓய்வெடுக்காமல்
தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ. தூரம் வரை பறக்கக்
கூடியவை.
-
சுத்தமான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. அதில் வேறு
தாதுக்கள் கலந்திருந்தால் மட்டுமே
மின்சாரம் கடத்தப்படும்.
-
சாகும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரே
உயிரினம் முதலைதான்.
-
பிரான்ஸ், மேற்கு ஜெர்மனியில் குழந்தைகளுக்கு நம்
விருப்பம்போல் பெயர் வைக்க முடியாது. அரசாங்கம் வெளியிடும் பெயர் பட்டியலில்
இருந்துதான் ஒரு பெயரை தேர்ந்தேடுக்க வேண்டும்.
-
நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த கரடி இரவில் சுறுசுறுப்பாக
செயல்படும். மரங்களில் தலைகீழாக ஏறும். குளிர் காலத்தை தூங்கியே கழிக்கும்.
இதற்கு மோப்பசக்தி அதிகம். .
-
ஐ.நா வின் முதல் பொதுச் செயலாளர் நோர்வே நாட்டைச் சார்ந்த
டிரைக்வேல்.
-
உலகமொழிகளில் வடமிருந்து இடமாக
எழுதப்படும் மொழி
உருது.
-
காரைக் கண்டுபிடித்தவரின் பெயர் குகாட்.
-
யோகா என்னும் சமஸ்கிருதச்
சொல்லுக்கு
ஒழுக்கம் என்று பொருள்.