-
வெட்டுக்கிளிகள் சுமார் 13 விதமான சப்தங்களை
எழுப்புகின்றன. இந்த சப்தங்களின் மூலம் மற்ற வெட்டுக்கிளிகளுக்கு வெவ்வேறு
செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறதாம்.
-
லாக்கா எனப்படும் பூச்சிகளின் உடலிலிருந்து
வெளிப்படும் ஒரு வகைப் பிசின்தான் அரக்கு. உலக அளவில் இது இந்தியாவில்தான் 80
சதவிகிதம் கிடைக்கிறது.
-
பிராணிகளில் அதிக ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது
ராட்சத ஆமைதான். இவை 300 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.
-
யானைக்குட்டி பிறந்தவுடன் 125 கிலோ
எடையிருக்கும்.
-
பாம்பு கடிக்கும் போது சுரக்கும் நஞ்சு 4
முதல் 6 துளிகள்தான்.
-
நெருப்புக் கோழி முட்டைகளை பகலில் பெண்ணும்,
இரவில் ஆணுமாக இரண்டும் அடைகாக்கின்றன.
-
ஒரு பட்டுப்பூச்சிக்கூடு சுமார் 3000 அடி
நீளமுள்ள பட்டு நூலைத் தருகிறது.
-
நாய்களுக்கு வியர்வை நாக்கின் வழியாகத்தான்
வெளியேறுகிறது. அதனால்தான் நாய் ஓடும் போது நாக்கை வெளியே தொங்கப் போட்டுக்
கொண்டிருக்கிறது.
-
ஸ்லாத் எனும் மிருகம் தலைகீழாக நடக்கும்.
மேலும் இது தண்ணீர் குடிப்பதில்லை.
-
பூச்சியினங்களில் குறைவான ஆயுட்காலம் கொண்டது
ஈ தான். ஆண் ஈ 14 நாட்களும், பெண் ஈ 29 நாட்களும் உயிர் வாழும்.
-
புத்திசாலியான 10 மிருகங்களுள் பன்றியும்
ஒன்று.
-
கோல்டன் ஈகிள் எனும் கழுகு ஒரு சிறு முயலை
ஆகாயத்திலிருந்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பார்க்கும் சக்தியுடையது.