........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-27

தலைகீழாக ஓடும் ஆறு

  • நெருப்புக்கோழி முட்டைகளை பகலில் பெண்ணும் இரவில் ஆணுமாக இரண்டும் அடை காக்கின்றன.

  • இந்தியாவில் மட்டும் 80 வகையான தேள்கள் உள்ளன.

  • தாய்லாந்து நாட்டில்தான் தித்திக்கும் புளியம் பழம் தரும் மரங்கள் இருக்கின்றன.

  • ஒளியானது வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செல்லக்கூடியது.

  • நாம் ஒரு வார்த்தை பேச வேண்டுமானால் நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.

  • பசுவின் கொம்பிலுள்ள வளையங்கள் மூலம் அது ஈன்றுள்ள கன்றுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும்.

  • கரப்பான் பூச்சி உணவு தண்ணீரில்லாமல் ஒரு மாதம் வரை உயிருடன் இருக்கும்.

  • மின்னல் ஒரு வினாடிக்கு 28,500 மைல் வேகத்தில் பூமியை நோக்கிப் பாயும். ஒரு மின்னலின் போது 250 கோடி வோல்ட்ஸ் மின்சார சக்தி இருக்கும்.

  • ஒரு இம்மியளவு என்பது 10,75,200ல் ஒரு பங்கு.

  • அமெரிக்காவின் மலைக் காடுகளில் வசிக்கும் ஒபாஸம் எனும் பிராணிக்கும் கங்காருவைப் போல் அடிவயிற்றில் ஒரு பை இருக்கிறது.

  • எறும்புகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கிறது.

  • நம் உடலில் சுமார் 639 தசைகள் இருக்கின்றன.

  • ஆப்பிரிக்காவில் "தஜீரா" எனும் ஆறு தலைகீழாக ஓடுகிறது. அதாவது அந்த ஆறு கடலில் உற்பத்தியாகி ஒரு ஏரியில் சங்கமமாகிறது.

  • கப்பல்களில் எடுத்துச் செல்லும் எடைகளை "அம்பாரே" என்கிறார்கள்.

- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி-4

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.