........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-29

தற்கொலை செய்து கொள்ளும் விலங்கு

  • இரவுநேரப் பிணம் தின்னி உயிரினமான ரக்கூன் உணவைக் கழுவிச் சாப்பிடும் குணமுடையது.

  • ஆஸ்ட்ரிச் எனும் பறவை ஒரே கூட்டில் 100 முட்டைகள் வரை இடும்.

  • அப்போசம் எனும் விலங்கு எதிரிகள் பயமுறுத்தினால் மயக்கமடைந்து விடும்.

  • லெம்மிங் எனும் விலங்கு ஸ்காண்டிநேவியாவைக் கடந்து சென்று கூட்டமாக தற்கொலை செய்து கொள்ளும்.

  • கார்டஸ் என்கிற மலர் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும்.

  • தாய்லாந்து நாட்டில்தான் வெள்ளை யானைகள் காணப்படுகிறது.

  • பூஜ்யத்தைக் கண்டுபிடித்த நாடு இந்தியா.

  • ஜேன் கிரே என்பவர் இங்கிலாந்தின் ராணியாக ஒன்பது நாட்கள் மட்டும் இருந்தார்.

  • பூரானுக்கு 100 கால்கள் வரை இருக்கும்.

  • குவைத் நாட்டில் வருமான வரி கிடையாது.

  • போலந்து நாட்டில் இரண்டு பள்ளிக்கூடங்களுக்கு இந்திராகாந்தியின் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

  • ஏரியஸ் என்ற மீன் முட்டைகளை வாய்க்குள் வைத்துச் சுமக்கக்கூடியது.

  • கங்காரு ஒரே குதிப்பில் முப்பது அடி தூரத்தைக் கடந்து விடுமாம்.

- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி-4

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.