-
பூக்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான "ஃபிளவர்ஸ்"
க்கு "எந்தப் பொருளிலும் சிறந்தது" என்று கூறுகிறது வெப்ஸ்டர் எனும் ஆங்கில
அகராதி.
-
இறைவனை பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபாடு
செய்வதை பூ+செய் என்றார்கள். அதுவே பூஜை என்று மருவி விட்டது.
-
கிறித்துவர்களின் வேத நூலான பைபிளில் லில்லி
எனும் மலர் பல இடங்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
-
இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர் ஆனில்
எந்தப் பூவின் பெயரும் இடம் பெறவில்லை.
-
இறைவனின் வழிபாட்டுக்குரிய பூக்களை எடுத்து
நுகர்ந்து பார்த்த குற்றத்திற்காக "கழற்சிங்கன்" எனும் அரசன் தனது
பட்டத்து ராணியின் மூக்கையும் கையையும் வெட்டி எறிந்து விட்டான்.
-
எறிபத்த நாயனார் எனும் சிவனடியார் "இறைவனுக்குச்
சூட வேண்டிய மலரின் தூய்மை மாசுபட்டு விடும்" என்று கருதி தனது வாயைத் துணியால்
கட்டிக் கொண்டுதான் நந்தவனத்தில் பூக்கள் பறிப்பாராம்.
-
காஷ்மீரில் பூக்கும் மலர்களில் 90 சதவிகித
மலர்களுக்கு மணம் கிடையாதாம்.
-
பூசனிச் செடியில் காய்க்கும் பூ, காய்க்காத பூ
என்று இரு வகையான பூக்கள் பூக்கின்றன.
-
மிக உயர்ந்த பூக்காத தாவரம் ஃபெர்ன் மரம்தான்.
-
காந்தள் மலர்தான் கார்த்திகைப்பூ என்று
அழைக்கப்படுகிறது.
-
பன்னீர்ப்பூக்கள் இரவில்தான் மலர்கின்றன.
-
குறிஞ்சி மலர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு
முறைதான் பூக்கின்றன.
-
பாதிரி என்கிற மலர் நடுப்பகலில் மலரக் கூடியது.