........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-42

நேருவிற்கு ஒரு குழந்தை மட்டும் ஏன்?

குழந்தைகள் மீது ஆசை கொண்டிருந்த நேரு, தன் சொந்த வாழ்க்கையில் ஏன் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாமல் ஒரே குழந்தையோடு நிறுத்திக் கொண்டார் என்கிற சந்தேகம் ஒரு பத்திரிகை நிருபருக்கு வந்தது.

நேருவை ஒருமுறை சந்தித்த போது அவர் அந்த சந்தேகத்தைக் கேட்டார்.

"தங்களுக்குக் குழந்தைகளின் மேல் அளவற்ற அன்பு இருக்கிறதே... அப்படியிருக்க தங்களது சொந்த வாழ்க்கையில் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொண்டீர்களே ஏன்?" என்றார்.

"எனக்கு நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஆசைதான். சொந்த வாழ்க்கையை விட பாரதத்தின் விடுதலையே எனக்கு முக்கியமானதாக இருந்தது. அதன் சுதந்திரத்திற்காகப் போராடியதில் சிறை செல்ல நேர்ந்தது. எந்த நேரத்தில் சிறை செல்வேன் என்று எனக்கேத் தெரியாது. சிறை தண்டனையிலிருந்து விடுதலை பெற்று வீட்டுக்கு வரும் சமயங்களில் என் மனைவி கமலா ஏதாவது ஒரு நோயால் பீடிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பார். அவர் குணமாகி வீடு திரும்பும் நேரத்தில் நான் ஏதாவது ஒரு குற்றத்திற்காக சிறை சென்றிருப்பேன்."

இப்படியே அவர் நோய்வாய்ப்படுவதும், நான் சிறை செல்வதுமாக எங்களது வாழ்க்கை சென்றதால் , ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது." என்ற.

நேருவின் பதிலைக் கேட்ட நிருபர் அப்படியே மெய்சிலிர்த்து நின்று விட்டார்.  

-தேனி எஸ்.மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

 முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.