........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-47

திரைக்கு வருகிறது வண்ணத்துப்பூச்சி.

ராசி அழகப்பன் என்ற பெயரில் பல கதை, கவிதைப் புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கும் அழகப்பன்.சி கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர். இவர் "வண்ணத்துப்பூச்சி" என்கிற பெயரில் குழந்தைகளுக்கான ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். நகரத்தில் வளரும் குழந்தையான ஸ்ரீலட்சுமி, தனது பள்ளி விடுமுறையில் கிராமத்திலிருக்கும் தாத்தா பாலசிங்கத்தின் வீட்டிற்கு வருகிறார். நகரத்தில் நான்கு சுவருக்குள் இருந்த அவளது வாழ்க்கை, கிராமத்தில் வண்ணத்துப்பூச்சியாக சிறகு விரிக்கிறது. 

நகரத்து கலாச்சாரம் குழந்தைகளின் உலகை சீரழிப்பதை எடுத்துக் காட்டுவதுடன் குழந்தைகளுக்கு எதிரான சில விசயங்கள், பெற்றோரின் பொறுப்பின்மை போன்று பல விசயங்களை படத்தில் காண்பித்து குழந்தை வளர்ப்பில் வேண்டிய பல மாற்றங்களை சுவையாகப் படமாக்கிக் காண்பித்திருக்கிறார். மொத்தத்தில் நாகரீக வாழ்க்கை மாற்றம் முதியவர்களையும் குழந்தைகளையும் எப்படி பிரித்துள்ளது என்பதை பற்றிய படம் இது. கிராமத்தில் தனிமையில் வாழும் தாத்தாவுக்கும், நகரத்தில் தனிமைப்படுத்தப்படும் பேத்திக்கும் இடையிலான பாச போராட்டம்தான் கதை. 

இப்படத்தில் பாலாசிங், ரேவதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மதர் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரோஹன் இசையமைத்திருக்கிறார். பி.எஸ். தரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குழந்தைகள் பற்றிய படமாகவோ, குழந்தைகளுக்கான படமாகவோ இருந்தால் தணிக்கை குழு ‘குழந்தைகள் படம்’ என்ற சான்றிதழை வழங்கும். பல வருடங்களாக இந்த சான்றிதழ் எந்த படத்துக்கும் வழங்கப்படவில்லை. தற்போது இந்த "வண்ணத்துப்பூச்சி’ படத்துக்கு தணிக்கை குழு, குழந்தைகளுக்கான பட சான்றிதழ் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட,

இயக்குனர் அமீர், "வண்ணத்துப்பூச்சி போன்ற சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் தரமிக்க படங்களை பிரமிட் சாய்மீரா போன்ற மிகப்பெரும் கார்பரேட் நிறுவனங்கள் வாங்கி வெளியிட வேண்டும். இதை இந்த மேடையில் ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன்" என்றார். 

இயக்குனர் மகேந்திரன், "உலகின் வேறெந்த மொழிகளைக் காட்டிலும் தமிழ் மொழியில் மட்டும்தான் மிகவும் அபத்தமான, யதார்த்தத்தை மீறிய டூயட் பாடல் காட்சிகள் வைக்கப்படுகின்றன. இனி மேலாவது இத்தகைய டூயட் பாடல்களை நமது இயக்குனர்கள் சினிமாக்களில் தவிர்க்க வேண்டும்"என்றார்.

இயக்குனர் பாலுமகேந்திரா, "தமிழில் குழந்தைகளுக்கான படம் என்று இதுவரை முழுமையான படமாக எதுவும் இல்லை. பெரியவர்களின் வசனங்களை குழந்தைகள் பேசுவதாகத்தான் நாம் பார்த்துள்ளோம். ஆனால், இந்த படம் நிச்சயம் ஒரு முன்மாதிரி படமாக இருக்குமென நம்புகிறேன் என்றார்

இயக்குனர்களின் கருத்துக்களுக்கேற்ப முற்றிலும் புதிய வடிவில் திரைக்கு வருகிறது "வண்ணத்துப்பூச்சி". இந்த வண்ணத்துப்பூச்சி குழந்தைகளை மட்டுமில்லாமல் அனைவரையும் கவர்ந்து வெற்றியடைய முத்துக்கமலம் வாழ்த்துகிறது. 

-தேனி. எம். சுப்பிரமணி.

  முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.