........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-69 நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்
நெல்லி மரம் ஒரு சிறிய மரம். இமாலயப் பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக வளர்கிறது. தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறிய அளவில் கொஞ்சம் துவர்ப்பும், அதிகம் புளிப்பும் கொண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் நெல்லி அளவில் சற்று பெரிதாக இருக்கும். இந்த நெல்லிக்குப் பல மருத்துவக் குணங்களும் சேர்ந்து இருப்பதாலேயே இதை அனைவரும் உயர்வாகப் புகழ்கிறார்கள். நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள். தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். பெரிய அளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய்க்கும், நெல்லி மொரப்பா செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். சிறியதை ஆயுர்வேத மருந்துகள், ஆயுர்வேத லேகியம் முதலியவை செய்யப் பயன்படுத்துகிறார்கள்.
- இந்த நெல்லிக்கனி குறித்து இந்து மதப் புராணங்களில் ஒரு கதை ஒன்றும் கூறப்பட்டுள்ளது. தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரமாம். அட அப்படியா? -ஜெயஸ்ரீ மகேந்திரன், சங்கரன்கோவில்.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.