........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-73

சின்னச்சின்ன செய்திகள்.

  • குடையைக் கண்டுபிடித்தவர் ஜான்ஹா வேஸ் என்பவர் ஆவர்.

  • பாம்பு மிசார் என்ற ஒரு வித பசையின் மூலம் வாசத்தை அறியும் தன்மையுடையது.

  • இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மான் இனம் திகாம்பர் என்ற இனம் ஆகும்.

  • சமுதாயப் பொதுபணிச் சேவைக்கு அளிக்கப்படும் விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதைப் பெற்ற முதல் இருவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா ஆவர்.

  • பிரமிடுகளுக்குப் பிரசித்திப் பெற்ற எகிப்து குண்டூசியை முதலில் கண்டுபிடித்த பெருமையும் பெறுகிறது.

  • மனித உடலில் வேலையில்லாத உறுப்பு குடல்வால்.

  • உயிர்காக்கும் உலோகம் ரேடியம்.

  • தமிழ்நாட்டில் கடல் மட்டத்தை விட மிக உயரத்தில் உள்ள ஏரி உதகமண்டல ஏரியாகும்.

  • பத்திரிக்கைகளே இல்லாத நாடு காம்பியா.

  • எந்த எண்ணாலும் மீதியின்றி வகுக்க முடியாத எண் 37.

  • பாட்டாலஜி எனும் துறை, முழுக்க முழுக்க முட் செடிகள் மட்டுமே ஆராயும் துறையாகும்.

  • கன்னியாகுமரி 1956-ம் ஆண்டு தான் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

  • உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள் ரோமானியர்கள் தான்.

  • இந்திய எல்லைக்கு உட்பட்டு மொத்தம் ஆயிரத்து இருநூறு தீவுகள் உள்ளன.

  • பூமியில் வாழும் மிருகங்களிலேயே பெரியது கடலில் வாழும் ப்ளூவேல் என்ற நீலத் திமிங்கலம் தான்.

  • காசினி எனும் விண்கலம் 1966-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

  • முதன் முதலில் முத்து கி.மு.12ம் நூற்றாண்டில் சீனக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

  • முதன் முதலில் பவழம் கி.பி.3ம் நூற்றாண்டில் கிரீஸ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

  • முதன் முதலில் உப்பு சீனக் கடலில் கி.மு.2200ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

  • எட்வர்ட் எலியட்ஸ் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது சென்னையில் நீதிபதியாக இருந்தவர். அவருடைய பெயர்தான் எலியட்ஸ் சாலைக்கு சூட்டப்பட்டது.

  • உஸ்மான் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னரின் ஆலோசகராக இருந்தவர். அவருடைய பெயர்தான் உஸ்மான் சாலை எனப் பெயர் பெற்றது.

  • ஹென்றி சேமியர்ஸ் என்பவர் கெட்ராஸ் கிளப்பை நிறுவினார். எனவே தான், அடையாற்றின் கரையில் இருக்கும் இந்தக் கிளப்பை நோக்கிச் செல்லும் சாலைக்கு சேமியர்ஸ் சாலை எனப் பெயர் பெற்றது.

  • பாந்தியன் என்ற பெயரில் ஒரு தேவாலயம் எழும்பூரில் உள்ளது. அதனால் தான் அங்கு சாலைக்கு பாந்தியன் சாலை என பெயர் சூட்டப்பட்டது.

  • நிறமாலையைக் காண ஸ்பெக்ட் ராஸ்கோப் எனும் கருவி பயன்படுகிறது.

  • மேகங்களின் திசை, உயரம் ஆகியவை அறியப் பயன்படும் கருவி நீபோஸ்கோப்.

  • புதுவகையான டிசைன்களை உருவாக்கப் பயன்படும் கருவி கலைடாஸ்கோப்.

  • மிகக் குறைந்த வெப்ப நிலையை அளவிட பயன்படும் கருவி கிரையாஸ்கோப்.

  • அச்சிட்ட படங்களைத் திரையில் விழச் செய்ய உதவும் கருவி எபிடாஸ்கோப்.

  • இராபர்ட் டி நொயிலி என்ற இத்தாலியர் 1605- இல் தமிழகம் வந்தார். தமிழ் மேல் கொண்ட பற்றினால் தமது பெயரை 'தத்துவ போதக சுவாமிகள்' என்று மாற்றிக் கொண்டார்.

  • வீரமா முனிவரின் இயற்பெயர் கொன்ஸ்டான்ஸ் ஜோசப் பெஷி என்பதாகும். கொன்ஸ்டான்ஸ் என்றால் தைரியம் என்று பொருள். இவர் தமது பெயரை 'தைரியநாத சுவாமி' எனச் சிறப்பாக வைத்துக்கொண்டார். அதுவே நாளடைவில் 'வீரமாமுனிவர்' ஆனது.

  • டாக்டர்.ஜி.யு. போப் 'தமிழ் மாணவன்' என்றே அழைக்கப் பட்டார்.

  • கிறிஸ்தவக் கம்பர் எனப்பட்டவர் எச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை ஆவார். இவர் இரட்சண்ய யாத்திரிகத்தை எழுதினார்.

  • தமிழ் நாவலின் தந்தை எனப்படுபவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார்.

  • ஆண்டுதோறும் நவம்பர் 10ம் தேதி போக்குவரத்து தினம் கொண்டாடப்படுகிறது.

  • பத்திரிமையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு இராக்.

  • சுமோ என்று அழைக்கப்படும் மல்யுத்த விளையாட்டு தோன்றிய நாடு ஜப்பான்.

  • புனித நகரமான மெக்கா சவுதி அரேபியாவில் உள்ளது.

  • இந்தியாவிலும் வங்க தேசத்திலும் கங்கை நதி ஓடுகிறது.

  • அமேரிக்காவில் கென்சிங்டன் நகரில் தோன்றிய சக்தி வாய்ந்த மின்னல் தரையிறங்கியது. அவ்விடத்தில் ஓர் அடி அகலமும், 30அடி ஆழமும் கொண்ட பள்ளம் ஏற்பட்டது. அதிலிருந்து நீ ஊற்றெடுத்து ஓடியது.

  • உலகில் அதிக நாள் உயிர் வாழும் உயிரினமாகத் திகழ்வது ஆமைகள். 300ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஆமைகள் உள்ளன.

  • கடல் எனப் பெயர் பெற்ற ஏரிகள் காஸ்பியன் கடல், சாக்கடல், ஆரல்கடல் முதலியனவாகும்.

  • பாரதத்தின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்.

  • காசநோய் நுரையீரலைத் தாக்கும்.

  • உலகில் மிகப் பெரிய மியூசிக்கல் சேர் போட்டி 1985-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி அமெரிக்காவில் உள்ள இன்டியானா நகரில் நடந்தது. 5,151 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் பில்பிரான்சன் என்பவர் வெற்றி பெற்றார்.

  • சர்க்கரை நோய் கணையம் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை பாதிக்கும்.

  • யானைக்கால் நோய் கால்களைப் பாதிக்கின்றன.

  • பூமியின் மொத்த நிலப்பரப்பே 29 சதவீதம்தான். ஆனால் அதையும் விட பசிபிக் பெருங்கடலின் பரப்பளவு 35.5%.

  • பரப்பளவில் இலங்கையைப் போல இரு மடங்கு பெரியது தமிழ்நாடு.

  • யானைத் தந்தங்கள் சிறிது மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானைகளில் ஒரு சிலவற்றிற்கு கறுப்பு நிறத் தந்தங்கள் உள்ளன.

  • கஸ்தூரிமானின் கொம்புகள் பூமியில் புதைந்திருக்கும் கிழங்குகளைத் தோண்டி உண்ணவும், சண்டையிடவும் உதவுகின்றன.

  • மின்னல் தாக்கி அதிகளவில் பாதிக்கப்படும் நாடு பனாமா.

  • வெளவால்களின் குரலை மனிதர்கள் கேட்க முடியாது.

  • இடுக்கி நீர்மின் திட்டம் கனடா நாட்டு உதவியுடன் கட்டப்பட்டது.

  • வெளவால்களின் குரலை மனிதர்கள் கேட்க முடியாது.

  • ஒப்பிலக்கணத்தின் தந்தை என வீரமா முனிவர் அழைக்கப்படுகிறார்.

  • பசுமைப் புரட்சி முதன் முதலில் மெக்ஸிகோ நாட்டில் துவங்கியது.

  • தேசிய திரைப்பட விழாவின் சின்னமாக மயில் உள்ளது.

  • 1971-ம் ஆண்டு முதல் தமிழக அரசு திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்த ஆணையிட்டது.

  • உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஆகும்.

  • விதியின் மனிதன் என மாவீரன் நெப்போலியன் அழைக்கப்படுகிறார்.

  • கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

  • கோலா கரடிகள் இடதுகை பழக்கம் கொண்டவை.

  • பட்டாம்பூச்சிகள் கால்களால் சுவையை உணரும்.

  • எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத உணவு தேன்.

  • மனித உடலில் சதை அழுத்தமாக உள்ள பகுதி நாக்கு.

  • தார் பாலைவனம் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளன.

  • தேனீ ஒரு செய்தியை தன் இனத்தில் உள்ள மற்றொரு தேனீயிடம் 8 என்ற எண் வடிவத்தில் நடனமாடித் தெரிவிக்கிறது.

  • ஆஸ்திரேலிய தேனீக்களுக்குக் கொடுக்கு இல்லை. இதனால் அவை கொட்டுவதில்லை.

  • தேனீக்களுக்கு மொத்தம் ஐந்து கண்கள் உள்ளன. தலையின் உச்சியில் மூன்று கண்களும், முன்பக்கத்தில் இரண்டு கண்களூம் உள்ளன.

  • தன் காலடியைத் தரையில் வைக்காத பறவை ஹரியாஸ் என்பதாகும்.

  • கொத்தமல்லியில் வைட்டமின் பி, பி2 மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

  • பாலைவனங்கள் பெரும்பாலும் கடக, மகர ரேகைகளின் அருகில் அமைந்துள்ளன.

 -ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.