-
உலகத்தின் மிகவும் பெருமை வாய்ந்த கட்டிடமாக அனைவராலும்
அதிசயத்து பார்க்கும் வெள்ளை மாளிகையில் முதன் முதலில் குடியேறிய அமெரிக்க
அதிபர் ஜான் ஆடம்ஸ்.
-
வாத்துக்கு இரு கண்கள் இருந்த போதிலும் ஒரு கண்ணில் மட்டுமே
பார்வை இருக்கிறதாம் . அதன் மற்றொரு கண்ணினால் பார்க்க இயலாது.
-
கம்பயூட்டரில் சில மணி நேரங்கள்
பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால்
அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
-
ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில்
வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது
30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
-
நெப்போலியன், ஜூலியஸ் சீஸர்,
ஹானிபால், பதினான் காம் லூயி போன்ற மாவீரர்கள்
பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தவர்கள்.
-
ஜப்பானியக் கொக்குகள் அதிக எடை
இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே இவை
விமானத்தைப் போல
முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க
முடியும்.
-
இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு
மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum
என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்ககின்றன.
-
மனிதனின் இதயத் துடிப்பு ஒரு நாளைக்கு
100,000 தடவைகளும், ஒரு வருடத்திற்கு 30 மில்லியன்
தடவைகளும், வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும்
துடிக்கின்றன.
-
ஒலியைவிட வேகமாச் செல்லும் விமானத்தின் பெயர் சோனிக் விமானம்.
இது 1969-ல் முதன்முதலாகப் பறந்த போது மணிக்கு 2,333 கி.மீ. வேகத்தில் பறந்தது.
-
உலகின் மிக வேகமாக ஓடும்
நாயினம் Grey hound தான். இவற்றின் வேகம் மணிக்கு
சுமார் 70 கிலோ மீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம்
சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்தில் உருவானதாக
கருதப்படுகின்றது.
-
உலகிலேயே மிகப் பெரிய
விளையாட்டரங்கம் பராகுவே நாட்டில் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2,40,000 பேர்
அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாமாம்.
-
சூனியம் அல்லது சுழி (zero)
என்ற எண் இந்தியர்களால் 3 ஆம் நூறாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
-
ஆசியா, ஐரோப்பா ஆகிய 2
கண்டங்களை இணைத்து வரும் ஒரே நகரம் இஸ்டான்புல் (துருக்கி) தான்.
-
இந்தியாவை மூன்று பக்கமும்
சூழ்ந்துள்ள கடற்கரை ஓரத்தின் மொத்த நீளம் 7516 கிலோமீட்டர்கள் .