........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-36 பெண்ணுரிமைக்கு ஒரு புதிய சட்டம்
-
ஒரு சகாப்தம் புதுமை பெறும் போது நமக்குள்ளே நிலவி வரும் பழக்க வழக்கங்களும் புதுமை பெற வேண்டுமல்லவா? அந்தந்த காலத்தோடு மனிதனுடைய வாழ்க்கையும் மாற்றம் பெறுகிறது. ஆனால் ஒரு சில வழக்கங்களை மட்டும் மாற்ற நினைத்தாலும் மக்கள் அதற்கு தடையாக நிற்கிறார்கள். அப்படி மாற்றத்தை காண முடியாத நிலையிலுள்ள ஒன்று “வரதட்சணை”. இன்றைய தினத்தில் “பரிசுகள்” என்ற பெயரில் மாற்றம் கொண்டு திருமணத்தில் வரதட்சணை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணை தடுப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த இந்தச் சமூகத்தில், திருமணங்களில் கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
1961-ஆம் ஆண்டில் வரதட்சணை ஒழிப்புச் சட்டம்
நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்தச் சட்டத்தின் கீழ் வரதட்சணை
கேட்பவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச்
சட்டத்தின் அடிப்படையில் எத்தனை நபர்கள் தண்டனை பெற்றிருக்கிறார்கள். இதற்கும்
அப்பாற்பட்டு “பரிசுகள்” என்ற பெயரில் இன்றும் திருமணங்களில் வரதட்சணை இருந்து
கொண்டுதான் இருக்கிறது. இன்றும் திருமணச் சந்தையில் கொடுக்கல்-வாங்கல் வியாபாரம்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இத்தனையும் தெரிந்தும் அரசாங்கத்தால்
நியமிக்கப்பட்ட வரதட்சணை ஒழிப்பு அதிகாரிகள் அல்லது பெண்ணுரிமைக் காவல்
அதிகாரிகள் கண்டும் காணாதது போல செயல்படுகிறார்கள். இந்தச் சட்டத்தில் சில
ஓட்டைகள் இருப்பதாக எண்ணிய அரசாங்கம் இன்னொரு புதிய சட்டத்தை உருவாக்க முயன்று
கொண்டிருக்கிறது. சொத்துரிமைச் சட்டத்தை தக்க சமயத்தில் நினைவு கூர்ந்த பிள்ளை வீட்டார்கள் வரதட்சணை ஒழிப்பு சட்டத்தை எவ்வாறு மறந்து விட்டார்கள்? பணக்கார வர்க்கத்தினர் குடும்ப கௌரவத்திற்காக அநாவசியச் செலவுகளை செய்து பிள்ளை வீட்டார்களை பரிசு மழையில் நனைத்து, பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்புகிறார்கள். வரதட்சணையை ஒழிக்க எத்தனை சட்டங்கள் உருவாக்கினாலும் எத்தகைய வர்க்கத்து மக்கள் திருமணச் சந்தையில் இந்த கொடுக்கல் வாங்கல் வியாபாரத்தைச் செய்து கொண்டுதான் வருகிறார்கள். நாய் வாலை நிமிர்த்த முடியுமா? அது கூட பரவாயில்லை. இந்தப் பழக்க வழக்கம் திருத்த முடியாமல் வளர்ந்து கொண்டே வருகிறது.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.