........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-37 நடிகையின் நிர்வாணப்படம் சரியா?
-
பெண்ணுரிமை பற்றி விவாதிப்பது பேஷனாகிக் கொண்டு வருகின்றது. பாலின சமன்பாடு, (Gender Equality) சமூகம் உயிர்ப்புடன் இயங்கும் தளத்தில் ஆணுக்கு பெண் சம உரிமை, ஆட்சி அதிகாரங்களில் பெண்கள் சுயமாக செயல்பட அனுமதித்தல், சுய வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக ஊரகப் பெண்களைக் குழுக்கள் மூலம் இணைத்தல் ஆகியவை அறிமுக நிலையினைத் தாண்டி வேர் பிடிக்க ஆரம்பித்துள்ளன. பிற்பகல் மற்றும் பின்னிரவு தொலைக்காட்சித் தொடர்கள் ஹவுஸ் ஒய்ப்களை அறைக்குள் சிறை வைத்தாலும் குறிப்பிட்ட சதவீதப் பெண்கள் உணர்வு தளங்களைத் தாண்டி அறிவுத் தளங்களுக்குள் நுழைந்து விடுகின்றார்கள். புலியை முறத்தால் விரட்டிய இரண்டாம் நூற்றாண்டு பெண்கள் முதல் இந்திராகாந்தி வரையிலான இருபதாம் நூற்றாண்டு பெண்கள் வரை வரலாறு நெடுகிலும் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு, நிர்வாகம் ஆகியவற்றில் மிகமிக குறைந்த எண்ணிக்கையிலேயே சாதனை புரிந்துள்ளனர்.
குழந்தையைச் சுமந்து பெற்றுக் கொள்ளும் உயிரியல்
காரணங்களோடு கற்காலங்களில் பெண்கள் வேட்டையாடி உணவுப் பொருள்களை வீட்டுக்கு
கொண்டு வந்தும் சமைத்தும் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் வழங்கியுள்ளனர்.
இக்கலாச்சாரம் இன்று வரை தொடர்ந்திருந்தால் ஆண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பெண்களால் தந்திரமாக தள்ளிப் போட வேண்டி
வந்திருக்கும் தலைகீழ் நிலைமை ஏற்பட்டிருக்கலாம். மதங்கள் மற்றும் அவற்றின்
தத்துவங்களை உருவாக்கியவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமயமாக்கல் (Institutionalisation)
காரணமாக பெண்கள் இன்று வரை கவிதைகளின் பாடுபொருளாகவும், சிறு தெய்வங்களாகவும்,
ஆண்களின் கண்களுக்கு இரையாகவும், ஆண்களிடமிருந்து மறைக்கப்படுபவர்களாகவும்,
குடும்பத்தின் கௌவரமாகவும் புனிதமாகவும் பெரும்பாலும் சமையலறை சாதனங்களில்
ஒன்றாகவும் மாற்றப்பட்டனர்.
நமது தேசம் சுதந்திரம் அடைய மகாத்மா எடுத்த
கடைசி ஆயுதமான "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும்
பரவிக் கொண்டிருந்த காலம் 1942-ல் தென் மாவட்டங்கள் முழுக்க சுதந்திரப் போராட்ட
புயல் வீசியது. கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்றிருந்த பாரதியாரைப்
பார்த்து அன்னி பெசண்ட் அம்மையார் கேட்டார், "இந்த தேசத்தின் மக்கள் தொகையில்
பாதியாக இருக்கும் பெண்களை நீங்கள் ஏன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தவில்லை
?" புதுமைக் கவிஞராகிய நீங்களே உங்கள் மனைவியை இம்மாநாட்டுக்கு அழைத்து
வரவில்லையே "உங்கள் போராட்டம் எப்படி வெல்லும்?" எனக் கேட்டு பாரதியாருக்கும்,
பாரத பெண்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டிய அன்னிபெசன்ட் அம்மையாரைப்
பற்றியெல்லாம் ஏதும் தெரிந்திருக்கவில்லை சொர்ணத்தம்மாள் அம்மையாருக்கு.
விடுதலையாகி வெளியில் வந்த சொர்ணத்தம்மாள் ஜோடி
மீண்டும் மறியலில் ஈடுபட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்றாவதாக
சொர்ணத்தம்மாள் மட்டும் கணவர் துணையின்றி மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு
மதுரையில் இருந்து வேலூருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையோடு அனுப்பி
வைக்கப்படுகினறார். "இந்த தேசம் சுதந்திரம் அடைய வேண்டும், அதற்குரிய தருணம்
இதுவே. நாம் தொடர்மறியலில் ஈடுபட வேண்டும் காந்தியடிகளின் உத்தரவே வேதவாக்கு"
என்ற வெளிப்படையான, வீரம்மிக்க கொள்கை மட்டுமே சொர்ணத்தம்மாளின் எண்ணங்களிலும்,
செயல்களிலும் ஆக்கிரமித்திருந்தது. ஆறுமாத சிறை தண்டனை முடிந்து வந்ததும்
மீண்டும் தயாரானார் மறியலுக்கு.
இருட்டுக்குள், இனமும் இடமும் தெரியாத காட்டுப்
பகுதியில் சிக்கிக் கொண்ட இவ்விருவரின் அழுகைச் சத்தத்தை கேட்டு வழிப்போக்கர்கள்
அருகில் உள்ள குடிசைப் பகுதியில் தங்க வைக்கின்றனர். இதற்கிடையில் இவர்களை
இறக்கி விட்ட லாரி டிரைவர் மனசு கேட்காமல் மறுநாள் மதுரை மாவட்ட காங்கிரஸ்
தலைவர் முத்துக்கனித் தேவரிடம் தகவலை தெரிவிக்கின்றார். உடனே காங்கிரஸ்
தொண்டர்கள் குழுகுழுவாய் பிரிந்து யானைமலை, ஒத்தக்கடை, அழகர்கோவில் என்று
மலைப்பகுதிகளில் தேடி கடைசியில் அவர்கள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்படுகின்றது.
சொர்ணத்தம்மாளும், லெட்சுமிபாய் அம்மாளும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். மதுரை
கீழ்பாலம் வைகை ஆற்றில் குளித்து முடித்த அவர்களுக்கு புது கைத்தறி ஆடைகள்
வழங்கப்பட்டன. அதற்கு பின் சொர்ணத்தம்மாள் காங்கிரஸ் சேவா தள தொண்டராக தன்
வாழ்நாள் முழுக்க கழித்தார்.
பின் திடீரென்று ஆவேசமானார். "ஏன் சார்,
காசு வாங்கிக் கொண்டு, கால்ஷீட் கொடுத்து சம்மதத்தோடு முக்காலே மூணு வீதம்
நிர்வாணமாய் நடிக்கின்றார்களே, இதில் எத்தனை வயசுப் பையன்கள் டிஸ்டர்ப்
ஆகியிருப்பார்கள" என்று என்னை பிடித்து உலுக்கியெடுத்தார். அவரிடமிருந்து
தப்பிக்க முயன்று பேச்சை மாற்றி "சார்! இந்த பஸ் அனுமந்தன்பட்டியில் நிற்குமா?"
என்று கேட்டேன். நிற்கும் என்று உடனே பதிலளித்துவிட்டு மீண்டும் நடிகைகள்
சப்ஜெக்ட்க்கு வந்தார். "சார், இவங்க கவலைக்கு காரணம் நம்மகிட்ட சொல்லாம
செஞ்சுட்டாங்களே,அப்படிங்கற கவலையா?" என்று பாய்ந்தார். கிராமத்தைச் சேர்ந்த
படித்த இளைஞரான அவரிடம் " தனி மனித உரிமை" காப்பாற்றப்பட வேண்டும்
என்பதையும் ஒவ்வொரு தனி மனிதர்களின் உணர்வுகள் புனிதமானவை அவரவர்களுக்கு (
நடிகையாய் இருந்தாலும் சுட ) என்பதையும் மெதுவாக எடுத்துக் கூறினேன்.
இருப்பினும் அவர் சமாதானமாகமலே இறங்கிச் சென்று விட்டார். சொர்ணத்தாய் அம்மாளின்
போராட்ட வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அசை போடும் போது நடிகைகளின் கண்ணீர்
பேட்டிகள் காற்றில் கசப்புடன் கரைந்து விடுகின்றது.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.