........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-62 கற்பனையைத் துரத்திக் கவனமாக இருங்கள்!
கற்பனை என்பது என்ன என்பதை முதலில் ஆராய்வோம். எண்ணங்கள் உற்பத்தியாவது தானாகவே நடைபெறுகிறது! உறவுகளில் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்படும் நிகழ்வுகள், பார்க்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் ஆகியவற்றைச் சம்பந்தப்படுத்தி உடனே கடந்தகால, நிகழ்கால, மற்றும் எதிர் காலங்களை இணைத்து எண்ணங்கள் தோன்றுகின்றன. சில வாசனைகளை நுகரும் போதும், சில பாடல்களைக் கேட்கும் போதும் எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த எண்ணங்களில் சில அவசியமானதாகவும், சில அவசியமில்லாமலும், சில அநுபவத்தை தருபவையாகவும், சில உணர்ச்சிகளைத் தூண்டுபவையாகவும் இருக்கலாம். அந்த எண்ணங்களை நாம் நினைத்தால் நீடிக்க விடாமல் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை மற்றும் அதற்குறிய ஆற்றலை மட்டும் இறைவன் மனிதவர்க்கத்திற்குக் கொடுத்திருக்கிறான்.
ஆனால் நாம்
அதனைப் பயன்படுத்தாமல், உற்பத்தியாகும் எண்ணங்களை நீடிக்கவிட்டு அதன் வாயிலாக
வேறு பல எண்ணங்களை உற்பத்தி செய்ய வைத்து, கோபம், பயம்,
பதட்டம், பொறாமை, வெறுப்பு, திருட்டுக் குணம்,
போதைக்கும் அடிமையாகும் குணம், காமவெறி, கொலை வெறி மற்றும் அனைத்து எதிர்மறைக்
குணங்களும் நமது மனதினை ஆக்கிரமிக்க இடம் கொடுக்கிறோம். ஆக்கிரமித்த அந்த
குணங்கள் நமது நாடி நரம்பு,மற்றும் சதை, எலும்புகளை சின்னாபின்னமாக்கி
சீரழித்து விடுகின்றன. நோய்களின் ஆட்சிக்கு நமது உடல் உட்படுத்தப்படுகிறது.
வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படுகிறது. சொல்லொண்ணாத துயரத்திற்குள்ளாகிறோம்.
துயரங்களை எதிர்த்துப் போராட முடியாதவர்கள் இந்த உலகில் தங்களுக்குள்ள கணக்கை
முடித்துக் கொள்கிறார்கள். கற்பனை வாழ்வில் தினம் தினம் செத்துப் பிழைக்கிறான். கற்பனையால் ஏற்படும் சீரழிவுகள் பல இருக்கின்றன. ஒவ்வொன்றும் புதுவிதமாக இருக்கின்றன.
விரகன்
ஏழ்மையால் மிகவும் துன்பத்திற்குள்ளாகியிருந்தான். சாப்பாட்டிற்கே வழியில்லை
என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான். உயிரை மாய்த்துக் கொள்வது என்று
முடிவெடுத்தான். மலை உச்சியை நோக்கி நடந்தான். உச்சியை நெருங்குவதற்கு முன்பு
ஒரு குகையைப் பார்த்தான். அந்த குகைக்குள் மெதுவாக நுழைந்து எட்டி உள்ளே
பார்த்தான். அங்கே முனிவர் ஒருவர் அப்பொழுதுதான் மனப்பயிற்சியை (தவத்தை)
முடித்துவிட்டு எழுந்திருப்பதைப் பார்த்தான். இவனை அவர் பார்த்து
விட்டார்.
“ நீ சாக
வேண்டாம்! இங்கிருந்து மலை உச்சிக்குப் போகும் சிறிது தூரத்தில் ஒரு
ஆல மரம் ஒன்று இருக்கும். அதுக்குப் பக்கத்தில கருவேல மரம் இருக்கும். அந்த
மரத்துக்குக் கீழே பூமியை தோண்டு. இரண்டு பொற்காசுகள் நிரம்பிய மண் குடங்கள்
இருக்கும். அதில ஒன்றை எடுத்துப் போய் மகிழ்ச்சியாக
வாழ்க்கையை நடத்து! ” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.
“எல்லாத்தையும் சொல்லிடுறேன் சார்! அந்த டாக்டர் என் உயிர் நண்பனை அநியாயமா
கொன்னுட்டான் சார்! ஒருவாரத்துக்கு முன்னாடி எனது நண்பனுக்கு மூளையில நரம்பு
வெடிச்சு இரத்தக் கசிவு ஏற்பட்டு இவன் ஆஸ்பத்திரில சேர்த்திருந்தோம். முதல்
நாலு நாள் சிகிச்சையில என் நண்பனுக்கு சுய நினைவு வந்திருச்சு. “நோயாளியிடம்
அதிகமாகப் பேசாதீங்க. இரண்டாவது ஸ்ட்ரோக் வந்துட்டா என்னால காப்பாத்த முடியாது!”
என்று அவன் சொன்னான். எங்களுக்குப் பயம் வந்திருச்சு. எனது நண்பனுக்கு மிகவும்
வேண்டிய டாக்டர் மூளை சம்பந்தமான நோய்களுக்கு ஸ்பெஷலிஸ்ட். சென்னையில
இருக்காரு. அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொல்லி
விமானத்தில் புறப்பட்டு வரச் சொன்னோம். அதற்கு அவர் “அந்த டாக்டர் வேறு
டாக்டர் எவரையும் அனுமதிப்பதில்லை. ஏற்கனவே அவரோடு ஒரு கசப்பான அனுபவம் எனக்கு
ஏற்பட்டிருக்கு. ஆம்புலன்ஸ்ல எல்லா வசதியும் இருக்கு. அதுல வச்சு சென்னைக்குக்
கொண்டு வந்திருங்க. நான் காப்பாத்திடுறேன்,” என்று சொன்னார். அதை டாக்டர்
சுந்தரத்திடம் சொன்னோம். அதற்கு அவன் கோபத்தில் சத்தம் போட்டு “ உங்க
நண்பருக்கு எந்த நேரத்திலும் இரண்டாவது ஸ்ட்ரோக் வரலாம். இந்த நிலையில் நான்
டிஸ்சாஜ் செய்து அனுப்ப மாட்டேன்”, என்று சொன்னான். அதற்கு எனது நண்பனது
மனைவியும் நாங்களும் “சார்! நீங்கள் எப்படி எழுதிக் கேட்டாலும் எழுதித்
தருகிறோம். டிஸ்சார்ஜ் செய்யுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டோம். அவன்
மறுத்துவிட்டான். டாக்டர் சத்தமாகப் பேசியது நண்பரின் காதிலும்
விழுந்துவிட்டது. இதனால் தனக்கு என்ன நோய் என்பதை அறிந்தவுடன் அவனுடைய
கண்களிலிருந்து நீராக வடிந்தது. அன்று இரவு நடு இரவில் இரண்டாவது ஸ்ட்ரோக்
வந்து இறந்து விட்டான் சார்”, என்று சொல்லிவிட்டுக் குலுங்கிக் குலுங்கி
அழுதான். இன்ஸ்பெக்டர் முருகன் மீது இரக்கம் கொண்டார் “அழுகையை நிறுத்து!
ஏட்டையா ஒரு டீ கொண்டு வந்து முருகனுக்குக் கொடுங்க!”
கவன
வாழ்க்கையில் இடி விழுந்தது போன்ற நிகழ்வு நடந்து துயரம் ஏற்பட்டாலும் மிக
விரைவில் சகஜ நிலைக்கு வந்து விட முடியும்.
“பாபு!
புரட்சி பண்ணி எந்த கோட்டையைப் பிடிக்கப் போறே!” சத்தத்தைக் கேட்ட பாபு
சிந்தனையிலிருந்து விடுபட்டவனாய் ராகவனைப் பார்த்தான்.
“வாடா!
இன்னிக்குப் பேப்பர் பாத்தியா! மகாப் பெரிய ஊழலைச் செஞ்சிருக்காங்க! இதுக்குத்
தாண்டா மக்கள் புரட்சி ஏற்ப்பட்டு புரட்சி அரசாங்கம் வரனுமின்னு சொல்றது!”
என்றான் பாபு. அவன் கண்களில் கோப வெறி தெரிந்தது.
“உன்னுடைய
வாதத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது! லெனின், மாசெதுங், பிடல் கேஸ்ட்ரோ
போன்ற புரட்சியாளர்கள் சிறந்த ஆட்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள்”. “ அவன் யாரப்பா?”
“யாரு!
சர்வாதிகாரி ஹிட்லர்தான்!அவன் மாதிரி ஆட்களின் பிறப்பை உன்னால் தடுக்கமுடியுமா?
பாபு! சில சமயம் மக்களும், அரசாங்கமும், மதங்களும் கூட தஙகளுடைய
கொள்கைகளிலிலும். கோட்பாடுகளிலும் சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாய நிலை
ஏற்பட்டுள்ளதை அறிந்திருக்கிறாயா? அரசும், மிருகங்கள் மற்றும் பறவைகளை
வதைப்பதிலிருந்து பாதுகாக்கும் ஆர்வலர்கள் மிருகங்களை சர்க்கசில் பயிற்சி
கொடுத்து வேடிக்கை காட்டுவது, பறவைகளை கூண்டில் அடைத்து மகிழ்வது ஆகியவற்றைத்
தடுத்து நிறுத்திவிட்டார்கள். பறவைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம் என்று
சரணாலயங்களை நிறுவி பறவைகளையும் மிருகங்களையும் அரசு பாதுகாக்கிறது. ஆனால்
தினசரி கோடிக்கணக்கில் ஆடுகளும், மாடுகளும், பறவைகளும், மீன்களும் மனிதர்களின்
உணவுக்காக கொன்று குவிக்கப்படுகிறதே! இதற்கு நீ புரட்சி செய்யமுடியுமா!
ஆக்கப்பட்டப் பொருள்கள் அனைத்தும் மனிதனுக்குச் சொந்தம் என்று யேசுநாதர்
போதித்து, கிறிஸ்தவர்கள் அசைவ உணவு சாப்பிடுவதற்கு சமரசம் செய்து கொண்டார்.
ஜப்பான் 3500 தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. அவர்களுக்கு மீன்தான் முக்கிய உணவு.
ஆகவே ஜப்பானில் வேறூன்றியுள்ள, அஹிம்சையைப் போதிக்கும் புத்தமதம், மீனை
உணவாகச் சாப்பிடுவதை ஏற்றுக் கொண்டது! சமரசம் செய்துகொண்டு
போய்க்கொண்டிருப்பதே வாழ்க்கை! உலக இயல்புபடி அதாவது மக்களின் இயல்புபடி, அதனை
ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை நடத்திச் செல்வதுதான் புத்திசாலிதனம். எந்தப்
பிரச்சனையானாலும் நீ திருவள்ளுவர் பெருமானை அனுகலாம். ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
பலகற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்று அவர் தெள்ளத் தெளிவாச்
சொல்லியிருக்கிறாரே! ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பதை மறந்து விட்டாயா?” “என்னவோ முணுமுணுத்தாயே!!”
“இல்ல!
ஒன்னுமில்ல!” பாபுவின் முகத்தில் கவலையின் சாயல் பளிச்சிட்டுத் தெரிந்தது.
“அப்பா உன்னைப் பார்த்தாரா?” மறுநாள் காலையில் பாபுவின் அப்பா சோமசுந்தரம் அவனின் படுக்கையிலிருந்து ஒரு கடிதத்தை எடுக்கிறார். பதட்டத்துடன் அதில் உள்ளவற்றைப் படிக்கிறார்.
“அப்பா! அம்மா
என்னை மன்னித்துவிடுங்கள்! நான் புரட்சி இயக்கத்தில் சேர்ந்து விட்டேன்.
சேர்ந்தது சரியா தவறா என்ற விவாதம் இப்போது தேவையில்லை. நாட்டில் நடக்கும்
அக்கிரமங்களை ஒழித்துக் கட்ட என்னுடைய பங்கை அளிக்க புரட்சி இயக்கத்தில்
சேர்ந்துள்ளேன். இனி எனக்கு எல்லாமே புரட்சி இயக்கம்தான். பக்கத்தில் ஒரு
மஞ்சள் பையில ரூபாய் இரண்டு லட்சம் இருக்கு. அதை அவர்கள் கொடுத்ததுதான்.
தங்கையின் திருமணத்தை முடித்து விடுங்கள். தம்பியை
நன்றாகப் படிக்க வையுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்காதீர்கள். எந்த
உதவி தேவைப் பட்டாலும் ராகவனைப் போய்ப் பாருங்கள். அவன் எனக்காகச் செய்வான்.
கடிதத்தைப்
படித்த முடித்த அவரின் கண்களில் கண்ணீர் துளிர்த்து வெளியேறியது. “எப்படி
லட்சுமியிடம் சொல்லுவேன்.....” என்று சோமசுந்தரத்தின் வாய்
முணுமுணுத்தது. “அன்புள்ள நண்பன் ராகவனுக்கு, வணக்கம். இந்தக் கடிதம் உன் கையில் இருக்கும் போது நான் காட்டுக்குள் சென்றிருப்பேன். ஆம்! புரட்சி இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். நீ எனக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறியிருந்தாய். கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்ளச் சொன்னாய். படிப்புக்கேத்த வேலைக்காகக் காத்திருந்தேன். இந்தியன், ரமணா போன்ற படங்களை அடிக்கடி பார்க்காதே! தனிமையில் உட்கார்ந்து யோசிக்காதே! உணர்ச்சி எழுப்பக்கூடிய செய்திகளைப் படிக்காதே; அதுவும் முடியாது என்றால், செய்தித் தாள்களைப் படிப்பதை கொஞ்சகாலத்துக்கு நிறுத்தி வை. செய்திகள் அனைத்தும் செத்துப் போன செய்திகள்; கடந்த காலச் செய்திகள்; அந்தச் செய்திகளால் உனக்கு எந்தப் பயனும் இல்லை. இப்பொழுது வேலைக்கு அப்ளிகேசனை நிரப்பிக் கொண்டிருக்கிறாயே, அதுதான் உனக்குப் பயன்படும் செய்தி. இப்படி நீ சொன்ன எந்த அறிவுரையையும் நான் கேட்க வில்லை. இரண்டு நாளைக்கு முன்பு கூட நீ சொன்ன அறிவுரைகள் என்னை மிகவும் பாதித்து விட்டது உண்மைதான். ஆனால் காலம் கடந்த அறிவுரை. நான் பல முறை காட்டுக்குள் சென்று மூளைச் சலவைக் (brain wash) குள்ளாக்கப் பட்டிருக்கிறேன். அவர்கள் பயிற்சி எடுக்குமிடங்களுக்கெல்லாம் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆகவே இனி நான் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. அப்படி திரும்பினால், அவர்களது ரகசியங்களைத் தெறிந்தவன் என்பதினால், அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள். இனி எனது வாழ்க்கை, புரட்சி முத்திரை குத்தப் பட்ட வாழ்க்கைதான். என் குடும்பத்தை என் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள். என் தந்தைக்கு உடந்தையாக இருந்து என் தங்கையின் திருமணத்தை நடத்து. என் தம்பியின் உயர் படிப்புக்கு என் தந்தையை வழி நடத்திச் செல். புரட்சி ஓங்குக! புரட்சி வெல்க!
இப்படிக்கு பாபு தன் மனதினை கட்டுக்குள் வைக்காமல், கற்பனையில் சதா மூழ்கியதின் பலன், அவனை தீவிரவாதியாக்கியது. அவன் வாழ்க்கை பாழானதோடு, அவனது பெற்றோரையும் மீளாத் துயரத்திற்குள்ளாக்கி விட்டான்; உடன்பிறப்புக்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டுச் சென்று விட்டான். பிரம்மன் அகல்யாவை எந்த ஆடவரும் பார்த்தவுடன் பிரமிப்பு அடையும்படியான பேரழகியாக படைத்திருந்தார். பல பேர் அவளுடைய கையைப் பிடிக்க விரும்பினாலும், பிரபலமான ஏழு முனிவர்களில் ஒருவரான கவுதம் முனிவர்தான் அவளுக்கு மாலை சூடினார். அகல்யா கிடைக்காததினால் பெருத்த ஏமாற்றமடைந்தவர்களில் மிக முக்கியமான ஒருவன் இந்திரன். அவள் மீது கொள்ளை ஆசை வைத்திருந்தான். அவனின் மனக்கண் முன்னாள் அவளுடைய உருவம் தொடர்ந்து வந்து போய்க் கொண்டிருந்தது. அவளோடு உடலுறவு கொள்வது போல கற்பனையில் மூழ்கி செயற்கை இன்பத்தை அனுபவித்து வந்தான். இது முற்றி, அவளை ஒரு நாளாவது அனுபவித்தே தீரவேண்டும் என்பதில் பைத்தியமாகி விட்டான். அதற்கான சந்தர்ப்பத்திற்காக ஆவலோடு காத்திருந்தான். கவுதமும் அகல்யாவும் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அவளை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை இந்திரனால் அடக்க முடிய வில்லை. ஆகவே சேவல் கூவுவது போல ஒலியை எழுப்பி கவுதமரை கங்கைக் கரைக்கு காலைக் கடன்களை முடிப்பதற்காகச் செல்வதற்கு தூண்டுதல் செய்தான். பிறகு கவுதமராக உருமாறி அகல்யாவை அணைத்தான். ஆரம்பத்தில் அகல்யா, கவுதமர் வெளியில் சென்றுவிட்டு விரைவில் திரும்பியதை நினைத்து ஆச்சரியமடைந்தாள். ஆனால் சிறிது நேரத்திற்குள் தன்னைத் தழுவி அணைத்துக் கொண்டிருப்பவன் கவுதமராக உருமாறி வந்திருக்கும் இந்திரன் என்பதை அவளது கூர்மையான மூளை கண்டுபிடுத்து விட்டது. இருந்தாலும் அவள் அவனுடைய ஆசைக்கு இணங்கினாள். உண்மையில் இந்திரனே தன் அழகில் மயங்கினதை நினைத்து அவள் பெருமையே கொண்டாள்.
கங்கைக்
கரையிலிருந்து திரும்பிய கவுதமர் இருவர்களின் தகாத உறவைக் கண்டு கோபமுற்றார்.
இருவரையும் சபித்தார். அவரின் சாபத்தால், இந்திரன் ஆண்மையை இழந்தான் மற்றும்
அகல்யா சாப்பாடு இல்லாமல் ஆயிரம் ஆண்டுகள் பிறர் கண்களுக்குத் தெரியாமல்
காற்றோடு காற்றாகக் கலந்து அந்த ஆசிரமத்தையே சுற்றிச் சுற்றி வந்து
கொண்டிருந்தாள்.
“ ஒன்னும்
இல்லீங்கய்யா!
ரேஸ்பிருந்தா
ருஷ்மாவின் வீட்டுக் கதவை நீண்ட நேரம் தட்டியபிறகு கதவு திறந்தது. கதவைத்
திறந்த ருஷ்மாவின் முகத்தைப் பார்த்த ரேஸ்பிருந்தா “ அழுதிட்டுருந்தியா!”
என்று கேட்டாள். அழுது அழுது ருஷ்மாவின் முகம் வீங்கியிருந்தது. இருவரும்
கூடத்திலிருந்த சாய்வு பிளாஸ்டிக் நாற்காலிகளில் சென்றமர்ந்தனர். “நேற்று ராத்திரி வரல! நேற்று ராத்திரி தலையில இடி விழுந்தமாதிரி ஒரு தகவலைச் சொல்லிஅனுப்பிச்சிருக்காரு!” “ யாரு அவன் பிஏ முனிராமா? நாசகாரப் பயகிட்ட இப்படி ஒரு நல்ல மனுசன் வேலை பாக்கிறாரே?” “அவரு மட்டும் அப்போதைக்கப்போது எனக்குத் தகவல் கொடுக்கல, எப்பவோ அவன் என்னைச் சீரழிச்சிருப்பான்!” “என்ன தகவலாம்?” “ஒரு வாரம் கழித்து என்னை டார்ஜிலிங்குக்கு கடத்திக்கொண்டுப் போகப் போறானாம்! இந்த ஊரை விட்டே போகச் சொல்றார் அந்த முனிராம்! நான் எங்க போவேன்!” என்று சொல்லிக் கொண்டே குலுங்கி குலுங்கி அழுதாள். ரேஸ்பிருந்தா எழுந்து அவளுடைய தோள்களை ஆதரவாக பிடித்து அணைத்துக் கொண்டாள். ரேஸ்பிருந்தாவின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்து வெளியேறியது. “புதிய ரேசன் கார்டு வாங்க அப்பிளிகேசனை அவன்கிட்ட கொடுக்கப் போயிருக்கக் கூடாது! தாசில்தாரு ஆபிசில கொடுத்திருக்கனும்!” என்று முணுமுணுத்தவாறு “நான் தப்புப் பண்ணிட்டேன்! தப்புப் பண்ணிட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே, தன் தலையிலேயே இரு கைகளாலும் மடார் மடார் என்று அடித்துக் கொண்டாள். ரேஸ்பிருந்தா அவளுடைய கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். “ உன் அம்மா அப்பா ஊருக்கே போயிரேன்” “நானும் அவரும் ஒரே ஊர்தான். இரண்டு வீட்டிலேயும் ரொம்பவும் கோபமாக இருந்தாங்க! ‘உங்க உயிருக்கு பாதுகாப்பு எப்பவும் எங்களால கொடுக்க முடியாது!; ரொம்ப தூரமா போயிடுங்க’ன்னு போலீசுல சொல்லிட்டாங்க! அதனாலதான் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால வந்து இங்க குடியேறினோம்”. “அம்மா பசிக்குதம்மா!” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்த ஐந்து வயது பையன் தோள்பட்டையில் உள்ள புத்தகப் பையை கீழே இறக்கி வைத்தான். “ருஷ்மா, எம் பொண்ணும் வந்திருப்பா. உங்க ஊருக்கே போகமுடியுமான்னு நல்லா யோசித்துப் பாரு. நான் வர்றேன்!” என்று சொல்லிக்கொண்டே ரோஸ்பிருந்தா புறப்பட்டாள்.
எம்.எல்.ஏ
ஜெய்சர்மா அவனுடைய அரசு வழங்கிய அலுவலகத்தில் ஒருவர் கொடுத்த மனுவை படித்துக்
கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் முனிராம் நின்று
கொண்டிருந்தான். ஜெய்சர்மாவுக்கு பக்கத்தில் இருபக்கங்களிலும்
பிளாஸ்டிக் நாற்காலிகளில் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்
உட்கார்ந்திருந்தார்கள். அவருடைய அறைக்கு எதிர் கூடத்தில் பொதுமக்கள் இருபது
பேர்கள் ஆண்களும் பெண்களுமாக இரும்பு நாற்காலிகளில் எம்.எல்.ஏ விடம்
மனுக்கொடுப்பதற்காக உட்கார்ந்திருந்தனர். வெளியில் வந்த ஒரு ஆள் “நீ உள்ள போமா!”
என்று சொன்னான். முக்காடு போட்டிருந்த பெண் உள்ளே போனாள். எம்.எல்.ஏ விடம்
மனுவை நீட்டினாள். குனிந்து எழுதிக் கொண்டிருந்த
ஜெய்சர்மா அப்பொழுதுதான் நிமிர்ந்து அந்த பெண்ணைப் பார்த்தார். முக்காடு
விலகிய சிறிது இடைவெளியில் முகத்தைப் பார்த்தவுடன் அவரின் முகத்தில் மகிழ்ச்சி
பொங்கியது. போலீஸ் ஸ்டேசனுக்குள் ஓரு பெண் கையில் இரத்தம் படிந்த கத்தியுடன் நுழைவதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் பதட்டத்துடன் எழுந்து நின்றார். தன் மேஜைக்கருகில் வந்து நின்ற ருஷ்மாவைப் பார்த்து “ அந்த கத்தியை அப்படியே மேஜை மேலே வச்சிரும்மா! என்னம்மா நடந்தது?” “காமவெறிபிடித்த எம்.எல்.ஏ வைக் கொன்னுட்டேன்! ” “எதுக்காகம்மா கொலை செஞ்ச?” “எனக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு (sexual torture) கொடுத்துக் கொண்டேயிருந்தான். என்னால பொறுக்க முடியல. அவனை இந்தக் கத்தியால குத்தியே கொன்னுட்டேன்!” எம்.எல்.ஏ ஜெய்சர்மா, ருஷ்மாவின் அழகை எப்பொழுதும் தன் மனக்கண்முன் கொண்டுவந்து ரசித்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார். அவர் செய்த கற்பனை அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அதனால் அவர் தன் தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை ஒழுங்காக செய்ய முடியவில்லை. ருஷ்மாவின் வீட்டுக்கு அடிக்கடி போனதால் அவருடைய நேரம் வீணானதுடன் அவளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தார். அதனால் கணவன் அருகில் இல்லாத நிலையில், ருஷ்மா, தன் கற்புக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டாள். ஜெய்சர்மா அடிக்கடி செய்த கற்பனையால், தன் மனைவி கூடச் செய்யும் தாம்பத்திய உறவின் போது, தற்காலிகமாக ஆண்மையற்றவராகி (temporarily impotent) விட்டார்; மனைவிக்குத் துரோகம் செய்தார்; ருஷ்மாவை கொலைகாரியாக்கி விட்டார்; அவரும் கொலை செய்யப்படுகிறார்; அவருடைய குடும்பமும் ருஷ்மாவின் குடும்பமும் அனாதைகளாகி நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன. மேற்குறிப்பிட்டதைப் போல, தினசரி கோடிக்கணக்கான நிகழ்வுகளும் அதனால் விளையும் துன்பங்களும், ஏமாற்றுதல்களும், மோசடிகளும், பித்தலாட்டங்களும், வழிப்பறிகளும், திருட்டுகளும், குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகளும், கற்பழிப்புகளும், தற்கொலைகளும், கொலைகளும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. இவ்வளவுக்கும் ஒரே ஒரு காரணம் ‘கற்பனை’. இதில் இறைப் பணியில் ஈடுபட்டுள்ள சாமியார்களும், பாதிரியார்களும் விதி விலக்கல்ல. பாதிரியார்கள் குழந்தைகளைப் பாலியல் தொந்தரவுகள் (sexual torture) கொடுத்ததற்காக ஆஸ்திரிலேயாவுக்குச் சென்ற போப் ஆண்டவர் அங்கு தவறு செய்த பாதிரியார்களுக்காக மன்னிப்புக் கோரினார்.
இரண்டாம்
உலகப் போர் துவங்கியதற்கும், அந்தப் போரில், ஏழு கோடியே இருபது லட்சம் பேர்
மாண்டதற்கும் காரணம் அந்த ஒரே ஒரு வார்த்தை ‘கற்பனை’ தான். இத்தாலியின்
சர்வாதிகாரி முஸோலினி. அவன் இத்தாலியை சீசர் காலத்திய ரோமப் பேரரசாக்க
கற்பனையால் கனவுக் கோட்டை கட்டினான். அதன் விளைவு ஜெர்மானிய சரவாதிகாரியோடு
கைகோர்த்தான். ஜப்பானின் ஆதிக்கத்தை விரிவாக்கி கொரியா மற்றும் சைனாவின்
கனிவளத்தை சுரண்ட கற்பனை கனவு கண்டனர் அதன் துருப்புக்களின் படைத் தளபதிகள்.
ஆகவே அச்சு நாடுகளின் ஒரு அங்கமாகச் சேர்ந்து முதல் அணுகுண்டுகளின்
தாக்குதலுக்காளான நாடு என்ற பெயரைப் பெற்றது.
கற்பனை மனதில்
எவ்வாறு வேலை செய்கிறது! இந்த இரண்டு விதமான உணர்வுக் குணத் தொகுதிகளிலிருந்து மனமானது ஆழ்மனதிற்குச் சென்று அப்போதைக்கப்போது நடக்கும் நிகழ்ச்சியின் தேவைக்குத் தகுந்தாற் போல ஒரு உணர்வை எடுத்து மேல் மனதிற்கு வந்து பயன்படுத்துகிறது. மனதில் தானாக தோன்றும் எண்ணங்களை நீடிக்கவிட்டு தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எண்ணங்களை தோற்றுவித்து அதிலேயே மூழ்கிக் கிடப்பதுதான் கற்பனை. அவ்வாறு செய்யும் கற்பனைதான் மேற்குறிப்பிட்ட உணர்வுகளை, ஆழ்மனதில் தோண்டி, மேல் மனதிற்குக் கொண்டுவரும் வாகனமாகும். கற்பனையில் தனது உடன்பிறப்புக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் மீதுள்ள அன்பினால், பெரிய தொகையைக் கொடுத்து அதை வைத்து முன்னேறுவதைப் போல எவரும் கற்பனை செய்து கனவு காண்பதில்லை.
ஹோட்டலில்
சாப்பிட உட்கார்ந்திருக்கும் மருதநாயகத்திற்கு, தான் உட்கார்ந்திருக்கும்
மேஜைக்கு முன்னால் ஒரு கூலிக்காரன் அழுக்கு உடையுடன் பல நாட்களாக சவரம்
செய்யாத முகத்தோற்றத்துடன் உட்காருகிறான். கூலிக்காரன் மீது மருதநாயகம்
இரக்கப்பட்டு, அவனுக்கு எந்த எந்த விதத்தில் உதவி செய்து முன்னுக்குக் கொண்டு
வரலாம் என்ற கற்பனை வருமா? அவர் என்ன செய்வார்? மனதிற்குள்
அருவருப்படைந்து வேறு மேஜைக்குச் சென்று அமர்வார். ஆகவே அன்பு, ஈவு, இரக்கம்
ஆகிய உணர்வுகள் மேல் மனதிற்கு வருவது அபூர்வம். இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து
கொள்ளலாம். மேல் மனதிற்கு பெரும்பாலும் எதிர்மறை உணர்வுகள்தான் வருகின்றன;
நம்மை ஆட்டிப் படைக்கின்றன.
மேற்குறிப்பிட்டவாறு மனித இனம் கற்பனையினால் எதிர்மறை உணர்வுகளில்தான் அநுபவம்
அடைந்து வருகிறது.
|
முகப்பு |