........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நித்திய ஜீவ வார்த்தைகள்

  • என்னுடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாக நடக்கிறது, நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று நினைப்பீர்களானால் அது மகா தவறு. கடவுளை அறியாதவனுக்கு இந்த உலகம் மிகப் பெரியதாகக் காணப்படும். ஆனால் அண்டசராசரங்களைப் படைத்த பரமாத்மா உங்களுடன் இருப்பாரேயானால் உலகம் சிறியதாகக் காணப்படும்.

  • தைரியம் என்பது ஒருவனை அடிப்பது என்பதல்ல. எதைச் செய்யக்கூடாதென்று கடவுள் தடை விதித்திருக்கிறாரோ அதைச் செய்யாமலிருப்பதுதான் தைரியமாகும். பொய்யான மக்களை நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் கடவுளை நீங்கள் முழுவதுமாக நம்புவதில்லை.

  • கடவுள் உங்களுடைய வாழ்க்கையைத் திட்ட்மிடுவாரென்றால் நீங்கள் மகத்தானவர். உங்களுடைய ஆஸ்தியைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. அவரைச் சார்ந்திருந்து ஜீவியம் செய்கிறீர்களா என்பதுதான் முக்கிய கேள்வி.

  • உங்களுடைய விண்ணப்பங்களை கடவுள் அருளவில்லை என்றால் கோபபடாதீர்கள். பொறுமையாய் இருங்கள். ஒருவேளை உங்களுடைய விண்ணப்பமே தவறானதாக இருக்கலாம்.

  • கடவுள் ஒரு போதும் பிரச்சனைகளை உண்டாக்குவதில்லை. நீங்கள்தான் உங்கள் பிரச்சனைக்குக் காரணம். ஆனால் பழியைப் பகவான் மீது போட்டு விடுகிறீர்கள்.

  • கடவுளை மறந்தவர்கள்தான் ஆலயங்களையும் கோவில்களையும் கட்டுகிறார்கள். கடவுள் மனிதன் மேல் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன? அவன் கடவுளின் சிருஷ்டிப்புக்குச் சாட்சியாக நடவாமல் நான், என் மனைவி, என் பிள்ளைகள் என்று கூறி, தனக்குத்தானே சுயமாக ஜீவித்துக் கொண்டிருப்பதுதான்.

  • தியானம் என்றால் என்ன? கடந்த யுகங்களிலும், காலாகாலங்களிலும் கடவுள் நமக்குச் செய்த எல்லா நன்மைகளையும் நினைவு கூறுவதுதான்.

  • முட்டாள் என்பவன் யார்? கடவுள் என்பவரைப் பற்றிய அறிவு இருந்தும் தன்னிச்சையாகவே அதை ஏற்றுக் கொள்ளாதவன். ஆனால் பகவான் என்பவரைப் பற்றிய முழு அறிவைப் பெற்றவன்தான் ஞானி.

  • சத்தியப் பிரச்சாரம் உங்களால் செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் அமைதியாக இருங்கள். செய்யும் மக்களைத் தடை செய்யாதீர்கள். அப்படிச் செய்வது பகவானுக்கு விரோதமான செயலாகும்.

  • ஒருவன் பெருமையடைந்து, தன்னைத்தான் தலைவனாக ஆக்க வேண்டும். என்று தன்னை உயர்த்துவானெனில், அவனுக்கு வைகுண்டலோகத்தில் இடம் கிடையாது.

  • கடவுள் முழு சக்தியோடு நம்மிடத்தில் வருவாரென்றால் நாம் அழிந்து விடுவோம். ஆகவேதான் அவர் ஒரு சாதாரண மனிதனைப் போல் வருகிறார். இல்லையெனில் நாம் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

தொகுப்பு: தாமரைச்செல்வி

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.