........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால்...
ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால்
அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
- அரிஸ்டாட்டில்.
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல.
இடையூறுகளும் துன்பங்களுமே.
- மாத்யூஸ்.
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய
கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.
-நியேட்சே.
வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம்
திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.
- பிராய்டு.
அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட,
அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
- புத்தர்.
கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை,
எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.
- முகம்மது நபி.
சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல்
பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத்
தவிர்க்கலாம்.
- ஸ்டீலி.
மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப்
பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
- வள்ளலார்.
இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக்
கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.
- பிரேண்டர்ஜான்சன்.
ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற
முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.
- சாமுவேல் பட்லர்.
வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின்
பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.
- கீர்கே கார்ட்.
நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா
நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.
- தாமஸ் புல்லர்.
தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற
எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
- டிரெட்ஸி.
இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள
வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
- மகாகவி பாரதியார்.
அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால்
துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து
விடுங்கள்.
- கில்ப்பின்.
நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம்,
அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது
தெரிவதில்லை.
-சுவாமி மித்ரானந்தா.
எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.
- ஆபிரஹாம் லிங்கன்.
கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக
அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.
-பிராங்க்ளின்
ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம்.
மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.
- பெர்னாட்ஷா.
அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக
கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.
- சர்ச்சில்.
தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி
எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.
- ஜி.டி.நாயுடு.
நமது அறிவு என்பது எறும்பு என்றால் வாழ்க்கையும்
இந்த உலகமும் யானையைப் போன்றது.
- சுவாமி சுகபோதானந்தா.
பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும்.
தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.
-வைரமுத்து.
-தொகுப்பு:
தேனி.எஸ்.மாரியப்பன்.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.