........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் புகழை நாம் தேடிச் செல்லலாமா...?
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக
வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது
நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும்
போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன.
அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக்
கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி
தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.
புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான்
நம்மைத் தேடி வரவேண்டும்.
ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம்
இல்லை; வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்.
எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள்.
முடிவில் உண்மைதான் நிலைக்கும் என்பதை மனதிற்கொண்டு விமர்சியுங்கள்.
சராசரி மனிதனின் எண்ணங்களையும், அவன் தேவைகளின்
வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத எவனும் ஒரு
அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ உரிமையோ கிடையாது.
மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காக
பெற்றோர்களைத் துன்புறத்தக் கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்களைக்
கஷ்டப்படுத்தக் கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக்
கொள்ள வேண்டும்.
கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு
நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம்
பண்பாட்டில்தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.
நடை, நடத்தை என்பதை நாம் பிரித்துப் பார்க்கக்
கூடாது. நடைதான் நடத்தையாகிறது.
சாதிகள் தேவையில்லை; மதப்பிரச்சினை தேவையில்லை;
மனிதர்களாக நாம் வாழ வேண்டுமென்றால் சாதி, மதப் பிரச்சினைகளை வைத்துப்
பேசக்கூடாது.
எனக்கு என்ற எண்ணம் வராமல், நமக்கு என்ற எண்ணம்
வரவேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் வளர்ந்தால் நாட்டில் ஒற்றுமை வளரும். சாதிக்
கொள்கை ஒற்றுமையை ஏற்படுத்தாது. மத்த்தில் பெயரால் தூய்மை தெரியவில்லை. தாழ்வுதான் தெரிகிறது. இத்தகைய சாதி உணர்வுகளை அகற்றச் சூளுரை ஏற்போம்.
நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்துத்
தெரிந்து கொள்வதை விட கேட்டுத் தெரிதல் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
உயர்வு, தாழ்வு என்ற நிலை சமூகத்தில்
இல்லாதபடி செய்ய வேண்டும். அதற்குரிய சட்டங்களைச் செய்ய வேண்டும். சமூக
சீர்திருத்தம் பேசிப் பயனில்லை.
ஒரு மொழியை நாம் புரிந்து கொள்ள முடியாத
போது அந்த மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாது.
திருமணம் என்பது சாதாரண வாழ்வில்
நடக்கும் ஒரு
நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்து விடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு
அதுதான் அஸ்திவாரம்.
உடலைப் பேணிக் காப்பது, தேகப்பயிற்சி
செய்வது உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத்
தூய்மை பெறுவது, எவ்வளவு
அதிகமாக விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது;
தற்காப்புக்கேற்ற ஒரு கலையைக் கற்பது - இவைகள் எல்லாமே மாணவர்களின் கடமையாகும்.
நாம் வந்த வழியை மறந்து விட்டோமானால் போகும்
வழி நமக்குப் புரியாமல் போய்விடும்.
மதத்தின் பெயரால் பிரச்சினைகள் இல்லை.
அவர்கள் செய்கின்ற செயல்களினால்தான் பிரச்சினைகள் வருகின்றன.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும்
அமைதியில்தான் ஆரம்பமாகிறது. பிறகு இறுதியில் உச்சக்கட்டம் ஏற்பட்டு முடிகிறது.
நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்;
அது உண்மையில் நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான்
வெற்றி கிட்டும்.
- எம்.ஜி.ராமச்சந்திரன்.
தொகுப்பு:
தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.