........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் பெண் மொழிகள்
பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது,
மேலானது
- மில்டன்
எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக
நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும்.
- மனு
ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே
படிக்க வைப்பதற்கு நிகரானது
- டிக்கன்ஸ்
பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள்
எல்லாவற்றிற்கும் விளக்கு
- ஜேம்ஸ் எல்லீஸ்
உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த
பெண்ணே.
-லவல்
அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து
மாய்ந்து விடுகிறது.
-ஹீஸ்
பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது
- இக்பால்
பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும்
மதிப்பில்லாதவை.
- சைரஸ்
வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண்
என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.
- கண்டேகர்
நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின்
செல்வாக்குதான்
- மெர்ஸன்
பெண்ணின் அன்பும் பரிவும் எங்கிருக்கிறதோ, அங்கு
ஆடையும், பண்பும் அடைக்கலம்
- மாபசான்
பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம்
-துவிஜேந்திரலால்
ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண்
பிறவியைப் படைத்திருக்கிறான்
- வால்டேர்
ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம்
அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.
-ஜவஹர்லால் நேரு
காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்
- ஷேக்ஸ்பியர்
அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய்
இருப்பவள் பெண்
-ஜெயகாந்தன்
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு
- லெனின்
சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்
- காந்தியடிகள்
அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை
உடையது
- டேவிட்ஹ்யூம்
ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண்
தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள்
- ரூஸோ
பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த
ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர்
- ரவீந்திரநாத் தாகூர்.
தொகுப்பு:
தேனி.எஸ்.மாரியப்பன்.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.