........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
a |
பொன்மொழிகள் சும்மா இருந்தாலும்... இருக்க விடுவதில்லை...!
எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்.
- தாகூர்
என்றும் நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன்
பயனின்றி அழியக்கூடாது.
-கார்ல் மார்க்ஸ்
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய
முடியாதவன் போதிக்கிறான்.
-பெர்னாட்ஷா
காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்.
-லெனின்
பற்றற்றவர்களாக இருங்கள். அதற்காக காட்டுக்குள்
சென்று விடாதீர்கள்.
-மாத்யூ கிரீன்
மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா
இருக்க விடுவதில்லை.
-மாவோ
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால்
எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான
பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
-சுவாமி விவேகானந்தர்
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்று
கொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன்
தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
-அடால்ஃப் ஹிட்லர்
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை
ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை
அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
-ஆலன் ஸ்டிரைக்
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப்
பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற
முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
-பான்னி ப்ளேயர்
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற
நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
-லியோ டால்ஸ்டாய்
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது
அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
-ஆபிரஹாம் லிங்கன்
எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு
வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு
விடலாம்.
- கெதே
உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி
கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ
வாழ்வில் வெற்றி பெறுவாய்.
-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும்
செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை
செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
-ஐன்ஸ்டைன்
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு,
சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில்
அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
-சார்லஸ்
ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை
அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.
- காந்திஜி
செயல் புரியாத மனிதனுக்கு
தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது
- சபாகிளிஸ்
தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.