பொன்மொழிகள்
விரைவில் புகழ் பெற்றவன் நிலை?

-
குழந்தைகளின் எதிர்காலம்
எப்போதும் தாயின் செயலில்தான் தங்கியிருக்கிறது.
- நெப்போலியன் போனபார்ட்.
-
மிகச் சிறந்த அல்லது மிக
மோசமான விசயங்களே விலை போகின்றன.
- ஷோபா டே
-
அன்பில் அச்சம் கலந்திருக்க
முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.
- அரிஸ்டாட்டில்.
-
நட்புதான் சுகங்களில்
மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.
- வைரமுத்து.
-
பிறர்க்கு நன்மை செய்பவன்
தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான்.
- ஜெனீக்கா.
-
வரவு அறிந்து செலவு செய்வது
சிக்கனம். செலவு அறிந்து வரவு சேர்ப்பது நற்குணம்.
- கவிதாசன்.
-
அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க
வேண்டாம்.ஒழுக்கத்தை நம்பியிருங்கள்
- பப்ளியஸ்ஸிரஸ்.
-
ஒருவனுடைய லட்சியம் இதுவென்று
அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று.
- ஹோம்ஸ்.
-
உண்மை மனிதனுக்குச் சொந்தம்.
பிழை அவன் காலத்திற்குச் சொந்தம்.
- கதே.
-
நம்பிக்கை என்பது கண்
விழித்திருக்கும் போதே காண்கிற கனவு.
- பிளினி.
-
வலிமை, துணிவு, உண்மை,
தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன்.
-அன்னிபெசண்ட்.
-
தோல்வி என்பது தள்ளிப்
போடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான் அதில் உற்சாக இலக்கு ஒன்றுமில்லை.
- சுவாமி சுகபோதானாந்தா.
-
சோம்பல் என்பது இளைப்பாறுதல்
அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
-புல்லர்.
-
கடவுள் குணமளிக்கிறார்.
மருத்துவர் பணம் பெறுகிறார்.
-பிராங்க்ளின்.
-
சிந்தனையும் செயலும் ஒன்றாகி
விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.
- ராமதாசர்.
-
வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும்
ஒரு குறிக்கோளாகி விடுகிறது.
- ஹாப்பர்.
-
மிக அதிக உயரத்தை அடைய
விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.
- சைரஸ்.
-
மனிதனை மனிதனாக்குவது உதவிகளும்,
வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.
- மாத்யூஸ்.
-
சுறுசுறுப்புக்கு எல்லா
வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.
- ஆரோன்புர்.
-
அறிவின்மை கேவலம். அதைவிடக்
கேவலம் அதிக மனமின்மை.
- ஜேம்ஸ் ஆலன்.
-
உற்சாகமான உழைப்பு இல்லாமல்
உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.
- எமர்சன்.
-
முன் கவனமுள்ள ஒரு நண்பனைப்
போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
- யூரிபிடிஸ்.
-
விரைவிலே புகழ் பெற்றவன் பெயரை
காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரம்தான்.
- வால்டேர்.
-
சிந்திக்காமல் படிப்பது வீண்,
படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
-கன்பூசியஸ்.
-
எளிமையும் தூய்மையும் ஒருவனை
உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.
- கெம்பில்.
-
அறிவாளிகள் காசுக்கு அடிமையாக
இருப்பதால் நம் அறிவை விலை கூறுகின்றனர்.
- வினோபாஜி.
தொகுப்பு:
தேனி. எஸ். மாரியப்பன்.

|