தவறு செய்தல் மனித குணம்,
மன்னித்தல் தேவகுணம். - போப்
உலகிலேயே பெரிய சுமை
மூடநம்பிக்கையே. - மல்டன்
அளவு கடந்த ஆசை, அளவற்ற
துவேசமாக மாறுகிறது. -சாக்ரடீஸ்
மனசாட்சி செய்யும் சித்திரவதையே
ஆன்மாவின் நரகம். - கார்லைல்
வாழ்நாளைப் பெருக்க உணவைச்
சுருக்கு. -பெஞ்சமின்
இதயக்குமுறலை மூழ்கடிக்கும் கலை
இதமான சிரிப்பு. -ஹார்ட்லி
சந்தேகத் திரையை கேள்விகளால்
கிழித்தெறிய வேண்டும். -காப்பர்
சிரமப்பட்டுப் பெறுவதே நீண்ட
காலம் நீடித்து நிற்கும் -சார்லஸ் கேப்டன்.
மகத்தான காரியங்களைச் செய்.
நீண்டகாலம் அது பற்றி கனவு காணாதே. -சார்லஸ் கிங்ஸ்லி
வேலையும் ஓய்வும் மருத்துவர்
கதவை மூடுகிறது. -புல்லெர்
தொல்லைகளை எளிதாக்குகிறது
பொறுமை. -தாம்சன்.
கவிஞர்கள் கஷ்டத்தில் கற்றதைக்
கவிதையில் போதிக்கிறார்கள். -ஷெல்லி
செல்வத்தை உண்டாக்காமல் நுகர
உரிமை கிடையாது. -பெர்னாட்ஷா
உடல்நலமே எல்லா உரிமைகளிலும்
மேலானது. -அமியல்
உன்னால் முடிந்தவரை உன் பணியினை
இனி நன்றாய் செய். -நியூட்டன்
நாணயத்தை இழந்தவன் இழப்பதற்கு
வேறொன்றும் இல்லாதவன். -விலி
செயல் புரிபவர் அனைவரும்
சிந்திப்பவர்களின் அடிமையே. -ஹின்
துன்பத்தை அனுபவித்தால் அறிவு
வளரும். -ப்ரவுனிங்
ஒற்றுமையின் விளக்கமாகி
விடுங்கள். அன்பின் நாக்காகி விடுங்கள். -லாங்பெல்லோ
குழந்தைப் பருவம் பகுத்தறிவின்
உறக்க நிலை. -ரூஷோ
ஆழ்ந்த சிந்தனைக்கு அதிக பலன்
உண்டு. -ஆல்பர்ட்
ஒரு பிழையை நீ திருத்த
மறுக்கும் போதுதான் அது தவறாகிறது. -ஆர்லாண்டோ
கூலி கொடுப்பவனை ஊனமாக்கி கூலி
வாங்குபவனுக்கு உதவமுடியாது. -லிங்கன்
கனவின் லட்சியம் மனிதனின்
விருப்பங்களைப் பூர்த்தி செய்து வைப்பதுதான். -ப்ராய்டு.
பல அறிஞர்களுடன் உறவாடினால்
நீயும் அறிஞனாகிறாய். -எபிக்டெட்ஸ்
இளமை என்னும் பக்குவமான
வயதில்தான் எவ்வித பண்பும் உருப்பெறுகிறது. -இங்கர்சால்
பொதுப்பணியில் நாணயமும்
நேர்மையும் வேண்டும். -நேரு
கண்ணால் காணப்படும் உலகம் வேறு.
அறிவால் உணரப்படும் உலகம் வேறு. -பிளாட்டோ
நம்பிக்கை என்பது கண்
விழித்திருக்கும் போதே காணும் கனவு. -பிளினி
எவ்வித தியாகமும் செய்யாமல்
எவ்வித நன்மையும் பெறமுடியாது. -ஹெல்ப்ஸ்