........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  குறுந்தொடர் கதை

ஒரு இனிய கானம்

  மூலக்கதை: FELICIA MASON (பெலிசியா மேசன்)       தமிழாக்கம்: இஷாரா

7. விஷ்ணுவின் நண்பன்

அன்று நடந்தவற்றை நினைக்கையில், சந்திப்பில் நடந்து கொண்டதற்கும், ஜோதியிடம் மனம் திறந்து பேசியதற்கும் உண்மையாய் தோன்றக் கூடிய ஒரு காரணத்தைக் கொண்டு வர முயன்றான். என்ன முயன்றும் ஒன்றைக் கண்டு கொள்ள முடியவில்லை.

முகேஷ் நிறுவனத்தில் துரித முன்னேற்றம் கண்டவள் ஜோதி. இன்று பகல் தன் மனதில் இருப்பதை தைரியமாக வெளிப்படுத்த முடியும் என்றும் காட்டி விட்டாள்.

மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றால், மனத்தின்மையுடன், கம்பனி வளர்ச்சிக்கு மிகச் சிறந்த ஆலோசனைகைளும் அவனுக்கு வேண்டியிருந்தது. அவை வனப்பான மேனியும், மயக்கும் புன்னகையும் கொண்டவளிடம் இருப்பது அவனது குற்றமல்லை.

"அதனாலே நீ பொறுப்பற்றவன் ஆகிவிட முடியாது," என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு தனது ப்ரீப்கேசைப் பற்றினான்.

அவளது வேலை அறிவிப்பை பொதுக் கூட்டத்தில் அறிவித்திருந்தாலும், உண்மை என்னவோ அவளது வேலை நன்னெறியும், ஆர்வமும், ம்ம்.. ஆமாம், திருமதி உஷா வீட்டில் இருந்த புகைப்படத்தில் அவளது புன்னகையையும் பார்த்ததிலிருந்தே அவனுக்கு என்னவோ ஒரு வித தீராத ஆவல்.

அரிமலைக்கு திரும்பிய நாளிலிருந்து அவன் பங்கேற்று வரும் சமூகக் கூடத்தின் பொதுச் செயலாளர் திருமதி உஷா. பெரியவர் நடத்திய ஹார்ட்-அட்டாக் நாடகம் அவனை ஊருக்கு இழுத்து வந்தது.

தனது பேரப் பிள்ளைகளுள் பொறுப்பான வாரிசைக் கண்டு கொள்ள வேண்டி, சி.பி.முகேஷ் தனது செயலாளர் மூலம் அந்த நாடகத்தை அரங்கேற்றினார். இருவர் அக்கறையுடன் விசாரித்தார்கள், மற்றவர்களோ திரும்ப போன் செய்து கூட விசாரிக்கவில்லை. ஆனால் பதற்றத்துடன் ஓடோடி வந்தது விஷ்ணு தான், இளிச்சவாயன். அவனது மற்ற ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கோ ஒன்று அக்கறையில்லை இல்லாவிட்டால் தங்களுடைய சீரான வாழ்க்கையை குழப்பிக் கொண்டு, அந்த ஆடம்பர வாழ்க்கைக்கே காரணமான பெரியவரை, விசரிக்க விரும்பவில்லை.

நடப்பு முறை அவனுக்கு சலித்து விட்டதாக ஜோதியிடம் அவன் கூறியது உண்மை.

அவன் குழுக்களை பிரித்த விதம் பார்க்க இலகுவாக தோன்றினாலும், ஊழியர்களின் பட்டியலை மிக நுணுக்கமான முறையில் அலசி ஆராய்ந்து வகுக்க அவனுக்கு அதிக நேரம் பிடித்தது. கம்பனியை மேம்படுத்தும் வளர்ச்சிக்கான மாற்றங்களும், சாத்தியக் கூறுகளும் அவனைப் பரவசப்படுத்தியது.

அதே சமயம் அதற்கு சமமான முக்கியமான வேலையொன்றும் அவனுக்கு இருக்கிறது.

அவனது அலுவலக அறைக்கு வெளியே இரு புறமும் நோட்டமிட்டான், பிறகு சர்விஸ் எலிவேட்டரை நோக்கிப் பாய்ந்தான் - அவன் இரகசியமாய் தப்பியோடும் வழி.

அவனது பதவியில் பல வசதிகள் உள்ளதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அவற்றில் சில இப்படி திருட்டுத்தனமாய் வேலை நேரம் முடியும் முன்பே வெளியேறுவது - பாஸாய் இருப்பதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா - மற்றும் ஜோதியை சந்திக்க முடிவது.

"சற்று பரிதாபமானது தான், முகேஷ்," தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

கார்களை நிறுத்தும் தளம் நோக்கி எலிவேட்டர் இறங்கிய நேரத்தில், கழுத்தில் இருந்த டையை உருவி தனது சூட் ஜாக்கட் பையில் செருகினான். அடுத்து, வெள்ளைச் சட்டை காலரை தளர்த்தினான். தனது அதிகாரிகளின் ஆடம்பர கார் அனிவகுப்புக்குப் பக்கத்தில் நின்றிருந்த தனது பழைய பிக்-அப் டிரக்கை அடைந்த நேரத்தில் விஷ்ணுவுடைய தோற்றமே மாறி விட்டிருந்தது.

நேரமாகிவிட்டதால், தனது காற்சட்டையை அவன் ஒன்றும் செய்வதற்கில்லை. சட்டையை இழுத்து விட்டு விரல்களால் முடியை கோரி விட்டான்.

தனது சூட் ஜாக்கட்டையும், பெட்டியையும் பின்புற இருக்கையில் வீசி விட்டு, கால்களில் இருந்த விலையுர்ந்த காலணிகளிலிருந்து சௌகரியமான பழைய காலணிகளுக்கு மாறினான். அந்த காலணிகளும் டிரக்கைப் போல அவனது சொந்த விருப்புக்குரியவை. பயன்பாட்டுக்கும், நடைமுறைக்கும் எளிதான டிரக்கை விஷ்ணு பெரிதும் விரும்புவதற்கு காரணம், அது பெரியவரை வெறுப்பேற்றியது.

சில நிமிடங்கள் கழித்து, அந்த காபி விடுதியின் கார் நிறுத்துமிடத்தை அடைந்தான்.

"ஹே, விஷ்ணு. என்னப்பா இவ்வளவு நேரம். பகல் பொழுது முடியப் போகிறது."

"சாரி. வேலையில் மாட்டிக் கொண்டேன்."

நீல்கமல் அவனை மேலிருந்து கீழாய் பார்த்தான். "உன்னை பார்த்தால் பணக்கார சாம்ராஜ்யத்தைக் கட்டியாலும் சக்தி வாய்ந்த தலைவனாய் தெரியவில்லை. "

தனது நீண்ட நாள் நண்பனின் பின்னலிட்ட முடியையும், நாடியில் ஒற்றைப் புள்ளியாய் இருந்த தாடியையும் பார்த்து விஷ்ணு புன்னகைத்தான். "நீ கூடத்தான் பார்ப்பதற்கு கிரிமினாலஜி பிஹச்.டி போல் தோன்றவில்லை."

"ம் ஒப்புக் கொள்கிறேன், நண்பா."

"எல்லோரும் வந்தாயிற்றா?"

"உனக்காகத் தான் காத்திருக்கிறார்கள். "

இருபது நிமிடம் கழித்து, நீலன் டிரம்மும், விஷ்ணு சாக்சாபோனும் வாசிக்க, அந்த காபி விடுதியின் இசைக் குழு தனது ஒத்திகையை ஆரம்பித்தது.

                                                                      
    ( தொடரும்)


பகுதி-6                                                                                                                                                                பகுதி-8

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு