........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-13 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
13. தகுதிக்கு மதிப்பு கொடுங்கள்
ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி ஆனால் இப்போது இதுவும் மாறிப் போய் விட்டது. ஆளுக்கு மரியாதை கொடுப்பதை விட அவர்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை வைத்துத்தான் மரியாதை கொடுக்கிறார்கள். ஒருவர் அணியும் ஆடை, ஆபரணங்கள் அவர்களுடைய உடலை மட்டுமில்லைமனதிற்குள்ளிருக்கும் அனைத்தையும் கூட மறைத்து விடுகிறது. வெளியில் காணும் தோற்றம் அவர்கள் மேல் ஒரு மரியாதையை வர வைத்து விடுகிறது. ஒருவர் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்கள் அதிக மதிப்புடையதாக இருந்தால்அவர் கெட்டவராக இருந்தாலும்கூட அவரை நல்லவராக ஆக்கி விடுகிறது. ஆடை அணிகலன்கள் உண்மையைக் கூட மறைத்து விடுகிறது. ஒருவருடைய தகுதி கூட அவருடைய ஆடை அணிகலன்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஒன்றும் தெரியாத சிலர் தரம் உயர்ந்த ஆடைகளை அணிந்து தங்களை தகுதி மிக்கவர்களாகக் காண்பித்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய உண்மையான தகுதி எனும் நிலை வெளிப்படும்வரை அவர்கள் உயர்ந்தவர்களாக நினைக்கப்படுகிறார்கள். உண்மையில் இது நல்லதா? போலியாக இருப்பவர்களிடையே உண்மையானவர்கள் நல்ல பெயரைப் பெற முடியுமா? ஒருவரின் உண்மையான தகுதியும் திறமையும் இந்த ஆடை ஆபரணங்கள் மட்டுமில்லை, எந்தப் பொருளாலும் மறைக்க முடியாது. உண்மையான திறமையும் தகுதியும் எப்படியும் வெளிப்பட்டே தீரும். எனவே ஆடை ஆபரணங்களில் நம்மை உயர்த்திக் கொள்வதை விட நம்முடைய தகுதியையும் திறமையையும் உயர்த்திக் கொள்வதுதான் நமக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். (வழிமுறைகள் வளரும்.)
|
முகப்பு |