........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-20 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
20. மகிழ்ச்சியும் கவலையும் சமமாகுமா?
ஒரு நல்ல விஷயம் நடந்து விட்டால் போதும், அதில்
குதூகலித்துப் போய்விடுகிறோம். அதே சமயம் ஒரு சிறிய தவறு நடந்து கெட்ட விஷயம்
ஏதாவது நடந்து விட்டால் போதும், அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறோம்.
மகிழ்ச்சி வந்தால் துள்ளிக் குதிப்பதும், கவலை வந்தால் முடங்கிப் போவதுமாக
இருக்கிறோம். இது சரியா? இந்தக் கழுதை எதையும் பெரியதாக எடுத்துக் கொள்ளாததற்கு மிகப்பெரிய காரணம் அது அழுக்குத் துணிகளையும், சலவை செய்த துணிகளையும் சமமாகவே கருதுகிறது. அந்தத்துணிகளில் அழுக்குத் துணி, சலவை செய்த துணி என்கிற வேறுபாடுகளைக் கருதுவதில்லை. கழுதை அந்தத் துணிகளை அதனுடைய சுமையாகவும், கடமையாகவும் மட்டுமே கருதுகிறது. இதுபோல் வாழ்க்கையில் நாமும் பல விஷயங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. இந்த சுமைகளைப் பொதுவானதாகக் கருத வேண்டும். அவைகளை நல்லது கெட்டது என்று தரம் பிரித்துப் பார்ப்பதாலேயே நாம் மனமுடைந்து போகிறோம். மன அழுத்தத்திற்கு ஆளாகிப் போகிறோம். வாழ்க்கையில் வரும் இன்பம் துன்பம் என்று இரண்டையும் பாடங்களாய்க் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றமடையப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நமக்கு நல்ல மனநிலையும் அதன் மூலம் நல்ல நிலையும் கிடைக்கும். (வழிமுறைகள் வளரும்.)
![]() |
முகப்பு |