........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-33 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
33. உண்மை அறியாமல் ஓடக் கூடாது.
சிலர் ஒன்றைப் பற்றி மேலோட்டமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் தானும் அதைப் போல் செய்து விட வேண்டும் என்று எதையாவது செய்கிறார்கள். பின்னர் அதில் விழுந்தும் விடுகிறார்கள். அதன் பின்பு அதிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். தான் விழுந்ததற்கான காரணத்தை அறியாமல் அந்தச் செயலைத் தன்னால் செய்ய முடியாது என்று முடிவுக்கு வந்து அதை அப்படியே விட்டுவிட்டு ஓடியும் விடுகிறார்கள்.
இவர்கள் இப்படி செய்வதால், தான் எடுத்துக்
கொண்ட எந்த ஒரு செயலிலும் வெற்றியைப் பெற முடியாமல், எந்தச் செயலையும் செய்ய
முடியாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்ததை அடைய
முடியாமல், இருப்பதைக் கொண்டு வாழப் பழகி விடுகிறார்கள். பின்னால் தன்னுடைய
தோல்விக்கான காரணம் தெரிய வரும் போது இந்த சிறிய விபரம் அன்றே தெரியாமல்
போய்விட்டதே என்று வருத்தப்படுகிறார்கள். இவர்கள் வெற்றியைத் தொட முடியாததால்
நல்ல பெயரையும் பெற முடியாமல் போய் விடுகிறது. - எந்த ஒரு செயலிலும் தோல்வி ஏற்பட்டால், பிறருக்கு வெற்றியாகும் சில செயல்கள் தனக்கு மட்டும் தோல்வியாவது ஏன்? என்று வெற்றியடைந்தவர்களிடம் கேட்டுப் பார்க்க வேண்டும். அவர்களிடம் உண்மையைத் தெரிந்து வெற்றியைத் தொட்டுப் பார்க்க வேண்டும். தானாக முடிவு செய்து ஒதுங்கிப் போய் விட்டுப் பின்னால் வருத்தப்படுவதை விட முன்பே சிந்தித்துச் செயல்பட்டால் நல்ல பெயரும், நல்ல நிலையும் நாம் அடைவது நிச்சயம். (வழிமுறைகள் வளரும்.)
![]() |
முகப்பு |