........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-47 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
47. நன்னடத்தைகளே நல்ல வழிமுறை
இந்த உலகில் மனிதனின் எண்ணங்கள் பலவாறாக இருக்கின்றன. ஒருவருக்கு நல்லதாகத் தெரியும் சில செயல்கள் மற்றவர்களுக்கு கெட்டதாகத் தோன்றுகிறது. சிலருக்கு அது தேவையில்லை என்பதாக இருக்கிறது. சிலருக்கு அது பிடிக்காமல் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பற்றுதல் கொண்டுள்ளவற்றைச் சார்ந்திருக்கும் செயல்கள் மட்டுமே பிடிக்கிறது. மற்ற செயல்கள் அவன் விரும்பத்தகாததாக இருக்கிறது. இந்நிலையில் அனைவரிடமும் நாம் நல்ல பெயரை எதிர்பார்த்து எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது.
இருப்பினும் நாம் செய்யும் செயலினால்
பிறருக்குப் பாதிப்பு ஏதுமில்லாமல் இருப்பதும், அந்தச் செயல் சிலருக்காவது
பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நம் மனத்தில் ஆழமாகப் பதிய
வைத்துவிட வேண்டும். இந்த எண்ணம் நம்மை நல்வழியில் நடத்திச் செல்லும். நம்
நன்னடத்தையே நமக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். (வழிமுறைகள் வளரும்.)
![]() |
முகப்பு |